arasan sanmukanaar01

ஏழ்தெங்கம் ஈழம் ஆனது!

குமரிக்கண்டத்தில் ஏழ்தெங்கம், ஏழ்மதுரை, ஏழ்முன்பாலை, ஏழ்பின்பாலை, ஏழ்குன்றம், ஏழ்குணக்காரை, ஏழ்குறும்பனை என்று 49 நாடுகள் இருந்ததாக இறையனார் உரையிலிருந்து அறிகிறோம்.

“பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக்

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள”

என இதைச் சிலப்பதிகாரமும் செப்புகிறது.

இதில் குறிப்பிடப்படும் ஏழ்தெங்க நாட்டின் எஞ்சிய பகுதி கடல்கோளினின்றும் தப்பித்து இன்று தீவாக இருக்கும் பகுதியே இலங்கை அல்லது ஈழம் ஆகும் .‘ஏழ் தெங்கம்’ என்பதே ஈழம் எனவும் இலங்கை எனவும் மருளி வழங்குகின்றது.

-அரசன் சண்முகனார்: தமிழ் நிலவரலாறு