தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை மறைமலையடிகளின்  25.10.1937 ஆம் நாள், குறிப்பு .  :

‘‘நாட்டுக்கோட்டைத் தியாகராசச் செட்டியார்

பழங்களுடன் என்னைக் காண வந்தார்’’

இதற்கு மறைமலையடிகளாரின் மகனார் மறை திருநாவுக்கரசு தரும் விளக்கம் :

 இவரைத் (தியாகராசச் செட்டியாரை) தமிழ்ப் புலவர் என்றே கூறிவிடலாம். புலவர்கள் பால் அன்பும் உதவியுமுடையவர். இன்று தமிழ்நாட்டின் தனிப் பெருஞ்செல்வர் அடிகள் நூல்களை இன்றும் நாடோறுங்கற்கின்றார்.

மதுரையில், தியாகராசர் கல்லூரியைத் தம் உரிமைப் பொருள் கொண்டு நடத்தி வருபவர். நூல் ஆலைகள் பலவற்றின் உரிமையாளர். சிவநெறியின் பற்றாளர். அறங்கள் பலவற்றைத் திறம்பட நடத்துபவர்.

இவர் தம் நன்மக்களாகிய சுந்தரமும், மாணிக்க வாசகமும் செந்தமிழும், சிவநெறியும் அறிந்தோராவர். அவற்றினைப் போற்றும் புரவலருமாவார். இவர்கள் மூவரும் தமிழ் மக்கள் முன்னேற்றங்கருதிச் செய்யுந் தொண்டுகள் அளவற்றன.

அடிகள் மறைவிற்குப் பின்னர், யான் ஒரு போது கருமுத்துத்தியாகராசரைப் பார்க்க நேர்ந்தது. அப்போதவர்கள், என்னை நோக்கி, ‘‘அடிகள் நூல் நிலையம் எந்நிலையிலுள்ளது?’’ என்று கேட்டனர். யான் அது பற்றித்தங்கட்கு எப்படித் தெரியும்?’’ என்று எதிர் வினாவிடுத்தேன். அதற்கு அவர்கள் ‘‘நான் பல்லாவரம் போந்து அடிகளைக் கண்டேன். அடிகள் நூல் நிலையத்தை எனக்குக் காட்டினார்கள்’’ என்றார்.

   பேரா.சி.இலக்குவனாரின் குறள்நெறி இதழ் நாள் 15-1 -64  இல் வெளிவந்தது