ilakkuvanar+05

 

புரட்சிப் பேராசிரியர் இலக்குவனார்

  பேராசிரியர் இலக்குவனார்விருந்தோம்புதலில் மிக்க விருப்பமுடையவர்; எல்லாரிடமும் எளிமையாக இனிமையாக உரையாடுவார்; தன் கருத்துகளை எதிர்ப்பு வந்தபோதும் ஆணித்தரமாக அஞ்சாது எடுத்துரைப்பார்; பதவியைப் பெரிய வாழ்வு எனக் கருதும் இவ்வுலகில் மொழியின் வாழ்வே தம்முடைய வாழ்வு எனக்கருதி உழைத்த அறிஞராவார்.

  கல்லூரிப் பேராசிரியர்களிடையே இவர் முற்றிலும் வேறுபட்டவரெனலாம். சைவ சித்தாந்தம், கம்பராமாயணம் போன்றவற்றைப் பற்றிப் பேசிவந்த நேரத்தில் சங்கஇலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள் மீது ஈடுபாடு கொண்டு மாணவர்களுக்கு எடுத்துக்காட்டி விளக்குவார். தொல்காப்பியத்தில் ஆழ்ந்த புலமை பெற்றவர். பேராசிரியர் என்ற பதவிக்கு அண்ணா ஓர் உவமை சொன்னார்.

 “ஆழமான புலமையுடையவராக இருத்தல் வேண்டும். அப்புலமையும் இலட்சியத்திற்காக இருக்க வேண்டும்.அதற்கு இலக்கணமாக விளங்குபவர் இலக்குவனார். பேசும்போது கூடப் பிற மொழிச் சொற்கள் கலக்காமல் பேசுவார். ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர். தொல்காப்பிய ஆய்வின் ஆங்கிலப் பகுதியை அவரே எழுதினார். தொல்காப்பிய உரை ஆசிரியர்களின் உரையைத் திறனாய்வு செய்து விளக்குவார்.

 தத்துவம் வரலாறு பற்றிய கருத்துகளைக் சொல்வார் நாட்டு வரலாற்றில் மிகுந்த ஈடுபாடுஉடையவர். பாவேந்தர் பாதிதாசன், மறைமலை அடிகள், திரு.வி.க. மீது மிகுந்த பற்றுடையவராய் இருந்தார். தொல்காப்பியத்தைச் சமூகநூல் என்று கூறியவர். வேறு எந்த மொழியிலும் இது போல் இல்லை என்று கூறினார்.

-கவிரயசு நா.காமராசன்

na-kamarasan01