புரட்சிப் பேராசிரியர் இலக்குவனார்   பேராசிரியர் இலக்குவனார்விருந்தோம்புதலில் மிக்க விருப்பமுடையவர்; எல்லாரிடமும் எளிமையாக இனிமையாக உரையாடுவார்; தன் கருத்துகளை எதிர்ப்பு வந்தபோதும் ஆணித்தரமாக அஞ்சாது எடுத்துரைப்பார்; பதவியைப் பெரிய வாழ்வு எனக் கருதும் இவ்வுலகில் மொழியின் வாழ்வே தம்முடைய வாழ்வு எனக்கருதி உழைத்த அறிஞராவார்.   கல்லூரிப் பேராசிரியர்களிடையே இவர் முற்றிலும் வேறுபட்டவரெனலாம். சைவ சித்தாந்தம், கம்பராமாயணம் போன்றவற்றைப் பற்றிப் பேசிவந்த நேரத்தில் சங்கஇலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள் மீது ஈடுபாடு கொண்டு மாணவர்களுக்கு எடுத்துக்காட்டி விளக்குவார். தொல்காப்பியத்தில் ஆழ்ந்த புலமை பெற்றவர். பேராசிரியர்…