மறைமலையடிகள் 1/5 – கி.ஆ.பெ.

மறைமலையடிகள்

சுவாமி வேதாசலம் என்கிற பல்லாவரம் உயர்திரு மறைமலையடிகள்

தமிழ்த்தாயின் தவமகன்.

பிறப்பு : 1876இல்

பிறந்த நாள் : சூலை 15

பிறந்த ஊர் :  காடம்பாடி

வட்டம் : நாகப்பட்டினம்

தந்தையார் பெயர் : சொக்கநாதப்பிள்ளை

இளமைப் பெயர் : வேதாசலம்

 படித்த கல்லூரி : நாகை வெசுலி மிசன்

 சைவ ஆசிரியர் :  சோமசுந்தர(நாயக்க)ர்

பொதுத் தொண்டு : 16ஆம் ஆண்டில்

முதல் தோற்றம் : இந்து மதாபிமான சங்கம்

திருமணம் : 17ஆம் ஆண்டில்

 படிப்பு முடிவு : 1894இல்

நட்பு : பேராசிரியர் சுந்தரம் பிள்ளை

தமிழாசிரியர் வேலை :  சென்னை கிறித்துவக் கல்லூரி

ஆசிரியராக அமர்ந்தது : 1898இல்

ஞானசாகரம் தொடங்கியது : 1902இல்

சைவ சித்தாந்த சமாசம் தொடங்கியது : 1905 இல்

கல்லூரியை விட்டது – : 1911இல்

அப்போது ஆண்மக்கள் நால்வர்; பெண் மக்கள் மூவர்

துறவு பூண்டது : 1911 ஆகத்து

பல்லாவரம் குடியேறியது : 1916இல்

பொதுநிலைக்கழகம் தோற்றியது : 1917இல்

யாழ்ப்பாணம் சென்றது : 1921இல்

திருவாசகவுரை வெளிவந்தது : 1926இல்

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் வெளிவந்தது : 1929இல்

புலமை : ஆங்கிலம், தமிழ், வடமொழி

பயிற்சி : மூச்சுப்பயிற்சி, அறிதுயில் பயிற்சி (யோகாப்பியாசம், இப்னா டிசம்) கொள்கை : தமிழே சிவம்

தொண்டு : 60 ஆண்டுகள்

எழுதிய நூல்கள் : 50க்குமேற்பட்டன.

இவை, அவரது வரலாற்றை அறிவிக்கப் போதுமானவை,

(தொடரும்)

கி.ஆ.பெ.விசுவநாதம்

எனது நண்பர்கள்