வட்டுக்கோட்டை

இந்து வாலிபர் சங்கத்தினால்,

வீட்டுக்கான கூரைத் தகடுகள் அன்பளிப்பு

  வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் அராலி மத்தியை முகவரியாகக் கொண்ட சசிதரன் இராசலோசனா அவர்களுக்கு உரூபா 20000 பெறுமதியான 10 கூரைத் தகடுகளும் அதற்கான பொருட்களும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத் தலைமைச் செயலகத்தில் வைத்துக் கையளிக்கபட்டுள்ளன.

 மேற்படி விண்ணப்பத்தில் தானும் கணவரும் 3 பிள்ளைகளும் வாழ்ந்து வருவதாகவும் ஓலையால் அமைந்துள்ள தங்களது வீட்டு கூரை தற்போது கூரை பழுதடைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பருவ மழை தொடங்குவதால் தாங்கள் வீட்டில் இருக்க முடியாத நிலை உருவாகியுள்ளது; தனது கணவரும் கடந்த காலப் போரின் போது காலில் காயம் ஏற்பட்டு உள்ளே துணுக்கு உள்ளதால் நீண்ட நேரம் கூலி வேலை செய்ய முடியாது உள்ளது என்றும் குறிப்பிட்டுத் தங்களின் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு தனது வீட்டு கூரைக்கான தகரங்களைத் தந்துதவுமாறு ஊர்ச்சேவையாளரின் பரிந்துரையுடன் விண்ணப்பித்திருந்தார்.

விண்ணப்பத்திற்க்கு அமைவாக கனடாவைச் சேர்ந்த கருணை உள்ளம் கொண்ட அன்பரின் நிதி உதவியுடன் அவர்களுக்கான கூரைத் தகடுகள் வழங்கி வைக்கபட்டுள்ளன.