(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180  தொடர்ச்சி)

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 181-190

(குறள்நெறி)

  1. பிறர் பொருளை விரும்பி அறமற்ற செயல் புரியாதே!
  2. உன்னிடம் இல்லை என்பதற்காகப் பிறர் பொருளை விரும்பாதே!
  3. பிறர் பொருள் விரும்பி வெறிச்செயல் செய்யாதே!  
  4. அருள்வழி நின்றாலும் பிறர்  பொருள் விரும்பாதே!
  5. பிறர் பொருளைக் கொண்டு செல்வம் சேர்க்காதே!
  6. செல்வம் குறைய வேண்டாமெனில் பிறர் பொருளை விரும்பாதே!
  7. (செல்வம் சேரப்) பிறர் பொருள் விரும்பா அறவாணராய் வாழ்!
  8. அழிவு வரப் பிறர் பொருள் விரும்பு! வெற்றிக்குப்பிறர் பொருள் விரும்பாதே!
  9. முன்னால் இழித்துச் சொன்னாலும் பின்னால் பழித்துச்சொல்லாதே!
  10. அறம்கூறும் நெஞ்சத்தான் எனில் புறஞ் சொல்லாதே!

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 191-200]