நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 7.

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 6. தொடர்ச்சி)


நற்றிணை

(1) சிறுவெள்ளாங் குருகே சிறுவெள்ளாங் குருகே
துறைபோ கறுவைத் தூமடி யன்ன
நிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே
யெம்மூர் வந்தெம் முண்டுறைத் துழைஇச்
சினைக்கெடிற் றார்கையை யவரூர்ப் பெயர்தி
யனையவன் பினையோ பெருமற வியையோ
ஆங்கட் டீம்புன லீங்கட் பரக்குங்
கழனி நல்லூர் மகிழ்நர்க்கென்
இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே.

இது காமமிக்க கழிபடர் கிளவி – (70 )

[சிறு வெள்ளாங்குருகே சிறு வெள்ளாங்குருகே

துறை போகு அறுவை தூ மடி அன்ன

நிறம் கிளர் தூவி சிறு வெள்ளாங்குருகே

எம் ஊர் வந்து எம் உண்துறை துழைஇ

சினை கெளிற்று ஆர்கையை அவர் ஊர் பெயர்தி        

அனைய அன்பினையோ பெரு மறவியையோ

ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்

கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்

இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே]

(2) திங்களுந் திகழ்வா னேர்தரு மிமிழ்நீர்ப்
பொங்குதிரைப் புணரியும் பாடோ வாதே
யொலிசிறந் தோதமும் பெயரு மலிபுனற்
பல்பூங் கானன் முள்ளிலைத் தாழை
சோறுசொரி குடவையிற் கூம்புமுகை யவிழ
வளிபரந் தூட்டும் விளிவி னாற்றமொடு
மையிரும் பனைமிசைப் பைதல வுயவு
மன்றிலு மென்புற நரலு மென்றிவ்
விரல்கவர்ந் துழந்த கவர்வின் யாழ
யாம முய்யாமை நின்றது
காமம் பெரிதே களைநரோ விலரே.

இது காமமிக்க கழிபடர் கிளவி: மீதூர்ந்த தலைமகள் சொல்லியது. (335)

 

[திங்களும் திகழ் வான் ஏர்தரும் இமிழ் நீர்

பொங்கு திரை புணரியும் பாடு ஓவாதே

ஒலி சிறந்து ஓதமும் பெயரும் மலி புனல்

பல் பூ கானல் முள் இலை தாழை

சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ              

வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு

மை இரும் பனை மிசை பைதல உயவும்

அன்றிலும் என்பு உற நரலும் அன்றி

விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்

யாமம் உய்யாமை நின்றன்று                          

காமம் பெரிதே களைஞரோ இலரே]

(3) நிலவே, நீனிற விசும்பிற் பல்கதிர் பரப்பிப்
      பான்மலி கடலிற் பரந்துபட் டன்றே
யூரே, யொலிமரூஉஞ் சும்மையொடு மலிபுதொகு பீண்டிக்
      கலிகெழு மறுகின் விழவய ரும்மே
கானே, பூமலர் கஞலிய பொழிலகந் தோறுந்
      தாமமர் துணையொடு வண்டிமி ரும்மே
யானே, புனையிழை ஞெகிழ்த்த புலம்புகொ ளவலமொடு
      கனையிருங் கங்குலுங் கண்படை யிலனே
அதனால், என்னொடு பொருங்கொலிவ் வுலக
      முலகமொடு பொருங்கொலென் னவலமுறு நெஞ்சே.

இது வேட்கை பெருகத் தாங்ககில்லாளாய் ஆற்றாமை மீதூர்கின்றாள் சொல்லியது. (348)

[நிலவே நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி

பால் மலி கடலின் பரந்து பட்டன்றே

ஊரே ஒலிவரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி

கலி கெழு மறுகின் விழவு அயரும்மே

கானே பூ மலர் கஞலிய பொழில் அகம்-தோறும்         

தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே

யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு

கனை இரும் கங்குலும் கண்படை இலெனே

அதனால் என்னொடு பொரும்-கொல் இ உலகம்

உலகமொடு பொரும்-கொல் என் அவலம் உறு நெஞ்சே]

குறுந்தொகை

(4) ‘கன்று முண்ணாது………………………………..கவினே’

இது பிரிவிடையாற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி யுரைத்தது. (27)

(5) [*] காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
யகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.

இஃது இடைச்சுரத்துச் செவிலித்தாய் கையற்றுச் சொல்லியது. (44)
—————-
[*இதனை அகத்திணைக்கேற்ற துறைவகையின் அமைத்துக் கருத்துரை, கூறினாரேனும் வெள்ளிவீதியார் தங்கணவனைப் பிரிந்து தேடிச்செல்வுழித் தங்கால்கள் நடக்கலாகாது செலவு தப்பியமையினையும் தங்கண்கள் அவனையே தேடி**??]

(தொடரும்)