அவன் வருகின்றான்!…. – கசமுகன் பிள்ளயாந்தம்பி
தமிழர்களை அழிப்பேன்
தமிழையும் அழிப்பேன்
தணிக்கைகள் பல செய்வேன்
தமிழ் இனத்தை
தவி தவிக்கச் செய்து
தரணியில் இல்லையெனச் செய்வேன்!….என்று
தனி மனித உரிமைகளைத்
தட்டிக் கழித்தான்
தனி நாடு கேட்டோம்
தத்துவங்கள் பல பேசி,
தந்திரங்கள் என நினைத்து,
தரித்திரத்தைத் தேடிக் கொண்டான்!….
தமக்கென இருக்கிறான் ஒருவன்
தக்க சமயத்தில் வருவான்
தயக்கமென்ன தமிழா!
தலை நிமிர்ந்து நில்லு
தமிழ் இனத்தின்
தனித்துவத்தைச் சொல்லு உலகிற்கு!….
http://www.lankasripoems.com/?conp=poem&catagoryId=200000&pidp=211614








Leave a Reply