சுந்தரமூர்த்தி கவிதைகள்
சிலேடை  அணி 16

மங்கையும் கங்கையும்

சடைமே லிருக்கும், சனிநீரு முண்டாம்
மடைமையுந் தண்ணளியாய் மண்டும் .- நடையழகாம்
நானிலத்தில் நற்றமிழ்வாழ் நற்கங்கை
வானிலவாள் மங்கைக்கே ஒப்பு .

பொருள்

1) சிவன் சடைமேலிருந்து கங்கை வருகிறது
பெண்களுக்கு கூந்தலில் போடப்பட்ட சடை தலைமேல் இருக்கிறது .

2) சனி நீர்  – ஊற்று நீர்

கங்கையிலும் நீர் ஊற்று இருக்கிறது
பெண்களின் கண்களிலும் நீர் ஊற்று இருக்கிறது .

3) கங்கை நீர் வெளிச்செல்ல மடைகள் உண்டு .
பெண்களிடம் மடைமை என்ற தன்மை உண்டு .

4) கங்கை பாய்ந்தோடும் அழகும்
பெண் நடையழகும் சிறப்பானதாகும் .

5) கங்கையும், மங்கையும் நற்றமிழில் போற்றப்பட்டு நிறைய பாடல்கள் உள்ளன .

இவ்வாறான சிறப்புகள் ஒத்துப் போவதால் கங்கையும் , மங்கையும் ஒன்று .

கட்டிக்குளம்
ஒ .சுந்தரமூர்த்தி