– கவிஞர் இரா .இரவி

எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் !

இல்லையேல் தமிழ் வீழும் !

‘கனியிருப்பக்  காய்கவர்ந் தற்று ‘  திருவள்ளுவர்

கற்கண்டாய் வடித்த குறள் இதற்கும் பொருந்தும் !

கனியாக நல்ல தமிழ் எழுத்துககள் இருக்கையில் !

காயான பிறமொழி எழுத்துக்கள் எதற்கு ?ravi r

பாலோடு நஞ்சு கலந்தால் பாலும் நஞ்சாகும் !

பழந்தமிழ் எழுத்தோடு வேறு கலத்தல் தீங்கு !

நம் மொழி தமிழ் எழுத்துக்கள் இருக்க !

வடமொழி எழுத்துக்கள் நமக்கு எதற்கு ?

அழகு தமிழ்ச் சொற்களில் திட்டமிட்டு !

அவர்கள் வடமொழிச்  சொற்கள் கலக்கின்றனர் !

வடமொழி  எழுத்துக்களைச் சேர்த்து எழுதுவதை !

வேண்டுமென்றே வழக்கமாகக்  கொள்கின்றனர் சிலர் !

என்ன வளம் இல்லை நம் தமிழ்ச் சொற்களில் !

ஏன் கையை ஏந்த  வேண்டும் பிற சொற்களிடம் !

உணவில் கலப்படம் உடல் நலத்திற்குக்  கேடு !

மொழியில் கலப்படம் மொழி வளத்திற்குக்  கேடு !

அமுதமொழி உலகின் முதல்மொழி தமிழ் இருக்க !

அந்நிய மொழிச் சொற்கள் தமிழில் எதற்கு ?

தமிழ் எழுத்தால் மட்டுமே எழுதுவோம் !

தமிழ் அல்லாத எழுத்துகளை மறப்போம் !