ஆழ்மனத்தில் தமிழ் உள்ளது
– முனைவர் வெ .இறையன்பு, இ.ஆ.ப.
[சிங்கப்பூர் ஆசிரியர் கழகமும் அமெரிக்கன் கல்லூரியும் இணைந்து மதுரையில் 11.11.2013 அன்று நடத்திய சிங்கப்பூர் தமிழாசிரியர்களுக்கான பயிற்சி முகாமில் தொடக்கவுரை]
தொகுநர் : கவிஞர் இரா .இரவி
தாய்மொழி என்பது ஆழ்மனதுடன் தொடர்புடையது. தமிழை நுகர , செம்மைப்படுத்திக்கொள்ள வந்துள்ளீர்கள் .தமிழில் மேன்மையும், புலமையும் பெறுவீர்கள். ஒவ்வொரு நொடியையும் அடர்த்தியாக்க முடியும். என்னை வளர்த்த குமுகாயத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் நோக்கத்தில் இங்கு வந்துள்ளேன். அதனால்தான் மாணவர்களிடம் பேசவும் ஏற்பாடு செய்யச் சொன்னேன். மொழி பண்பாடோடு தொடர்புடையது. கருப்பு வெள்ளை உலகம் பற்றிப் பேச வந்துள்ளேன் .
தெரிந்த வீட்டில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் குழந்தைகள் அடிக்கடி ஃசிட் / SHIT என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர் என்று பெற்றோர்கள் என்னிடம் வருத்தப்பட்டனர். அவர்களிடம் அந்தச் சொல்லின் தமிழ்ப் பொருளை – நீ சொன்னதன் பொருள் ( மலம் பேதியாகுதல்)என – அவர்கள் சொல்லும் பொழுது எல்லாம் சொல்லச் சொன்னேன் .ஒரு வாரத்தில்ஃசிட் / SHIT சொல்வதை விட்டு விட்டனர் .
எந்த மொழியும் அறிந்து கொள்வதில் தவறில்லை. சொந்த மொழி, தாய் மொழி, தமிழ் அறியாமல் இருப்பதுதான் தவறு.
… … …. ….
உதட்டிலிருந்து வருவது அயல்மொழி. உள்ளத்திலிருந்து வருவது தாய் மொழி, தமிழ் மொழி. மனித மூளையை ஆராய்ந்தார்கள். கைகளைப் பயன்படுத்தும் போது மூளையின் எந்தப் பகுதி வேலை செய்கின்றதோ அதே பகுதி தாய்மொழி பேசும்போதும் வேலை செய்கின்றது. தாய் மொழி உழைப்போடு தொடர்புடையது. பல்வேறு வகையான வளர்ச்சிகளுக்குக் காரணம் தாய்மொழி. தாய்மொழியை வாழ்விலிருந்து பிரிக்க முடியாது .
திருக்குறள் பல்வேறு நுட்பங்கள் உடையது. சேக்சுபியர் கிளியோபாட்ராவை மற்ற பெண்கள் போல அல்ல சாப்பிட சாப்பிடப் பசி எடுக்க வைக்கும் அழகி என்பார் .ஆனால் திருவள்ளுவர் அவளைப் படிக்கும் புத்தகம் என்பார் .உணவைச் சொல்லாமல் நூலை சொல்லியவர் திருவள்ளுவர் .
மனத்தில் நேசிக்க வேண்டும். தமிழ் மொழியை நேசித்த காரணத்தால் பஞ்சாபியர், காவல்துறை அதிகாரி திரு தோக்ரா, அவர்கள் தமிழில் எழுதுகிறார், பேசுகிறார். கம்பஇராமாயணம் பற்றிப் பேசுகிறார். எதை நாம் நேசிக்கிறோமோ அதை எளிதில் கற்றுக் கொள்ள முடியும். கவிதை போல சொற்கள் வரும். வரிகள் வற்றாத நதியாக வரும். தமிழை நான் யோசித்துப் பேச வில்லை. ஆழ்மனத்தில் தமிழ் உள்ளது.
ஆசிரியர் என்பவர் படித்ததைச் சொல்பவர் .
ஆசான் என்பவர் நல்லதைச் சொல்பவர் .
குரு என்பவர் வாழ்கையின் தாக்கத்தைச் சொல்பவர் .
ஆசிரியர் தன நன் நடத்தையின் மூலம் மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் .வைராக்கியம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்
சங்க இலக்கியப் பாடல் ‘கொங்கு தேர் வாழ்க்கை’ “எத்தனையோ பூக்களில் வலம் வந்துள்ள வண்டே என் காதலியின் கூந்தலைப் போலமணம் வீசும் மலரை கண்டதுண்டா ?”
சிலர் இந்தப் பாடல் பிழை உள்ளது என்கின்றனர் .இதில் பிழை இல்லை .எல்லோருடைய கூந்தலுக்கும் மணம் உண்டு. எல்லோருக்கும் தலையில் ஒரு வித சுரப்பி இருப்பதால் ஒரு வித பளபளப்பும் மனமும் உண்டு. இன்னொரு கருத்து வண்டு மலரை உண்ணும் ஆனால் நுகராது .
இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள் .கருப்பு வெள்ளை என்ற இந்த உலகை, இசை, ஓசை, ஓவியம், கலை, சிலை என வளர்த்து வண்ணமாக்குபவர்கள் தமிழர்கள். நாம் .படித்ததைப் பகிர்வோம், கொடுக்கக் கொடுக்கக் கூடும் தமிழ்.
தமிழ் பரப்ப வந்துள்ள உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
Leave a Reply