தமிழ்

தமிழின்  சிறப்பு  தனை  யறிந்திட

அமிலம் போல் ஆசை நெஞ்சரிக்க,

தொடங்கினேன் கற்க தொல் காப்பியம்.

குடம்தேன் எறும்பு குடிக்க முயல்வதுபோல்

எண்ணினேன், ஓர் எண்ணம் கொண்டேன்;

என் உயிர் உள்ள வரை,

உணவு போல் உயிர்மொழித் தமிழை

மனம்தினம்  சுவைக்கும் வண்ணம் செய்யவே!

ச.சுதாகர்