தமிழ்நாடு – சிங்கப்பூர் நட்புறவுக் கழகத்தின் சார்பில், செந்தமிழ் மொழியை சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக்கிய சிங்கப்பூரின் தந்தை நினைவில் வாழும் (இ)லீ-குவான்-இயு வின் பிறந்த நாள் விழா,

புரட்டாசி 01, தி.பி. 2049  திங்கட்கிழமை 17.9.2018 மாலை 5.30 மணியளவில்,

சென்னை மயிலாப்பூர் “பாரதீய வித்யாபவன்”

குளிரி முதன்மை அரங்கில் நடைபெறுகிறது.

இக்கழகத்தின் அமைப்பாளர் தஞ்சை கூத்தரசன் வரவேற்றுப் பேசுகின்றார். நா.சந்திரபாபு விழாவிற்குத் தலைமை ஏற்கிறார். சிங்கப்பூர் நாகை தங்கராசு (இ)லீ-குவான்-இயுவின் படத்தினைத் திறந்து வைக்கிறார்.

பேராசிரியர் மறைமலை இலக்குவனார்

சிறப்புரையாற் றுகிறார்.

விருதுகள் பெறும் சோழநாச்சியார் இராசசேகர், கோவை அ.திராவிடமணி, வழக்குரைஞர் வீ.இல.இரசனிகாந்த்து, சீ.மெ.கத்தூரி மெய்யப்பன், ஆகியோருக்கு ஏ.எல்.ஆறுமுகம் விருதுகளை வழங்குகிறார்.

தாம்பரம் கு.நாராயணன், வழக்குரைஞர் சூர்யா வெற்றிகொண்டான், கிண்டி ஆர்.செல்வம் வாழ்த்துரையாற் றுகின்றனர்.

கந்திரி கரிகாலன் தொகுப்புரையாற்ற கவிஞர் கா.முருகையன் தகுதியுரை படிக்கின்றார்.

வழக்குரைஞர் திருச்சி என்.செந்தில் நன்றி நவில்கின்றார்.