aa.ve.mullainilavazhagan

(தை 4, 2046 / சனவரி 18, 2045 தொடர்ச்சி)

காட்சி – 8

(நாடகக் காட்சி – 2)

அங்கம்   :     அருண் மொழி, பூங்குயில்

இடம்      :     அருண்மொழி இல்லம்

நிலைமை  :     (இல்லாளும் நானென இன்பம்

பொழிகின்ற பூங்குயில் கண்டு

தலைவனும் நானென அருணும்

நவின்றிடும் முறையே இங்கு)

அருண்    :     மலரே நீ வருவாய்!

தாள்கொஞ்சம் திறவாய்!

கள்வனோ அல்ல;                                                                                                                                                               கணவனே! வந்தேன்!

பூங்       :     இதோ நான் வந்தேன்!

இனிய நீர் சுமந்து!

பாதமோ கழுவி

பாங்காக வருவாய்!

அருண்    :     என் குரல் கேட்டும்

ஏன் இந்த மெளனம்?

           என்ன நீ! செய்தாய்?

                                இயல்பாகச் சொல்வாய்!

பூங்       :     அழைக்கும் உன் முறையோ

இசையாகக் கேட்க

தழைந்தே நான் நின்றேன்!

     வேறென்றும் இல்லை!

                       இல்லமோத் தூய்மை

           இருக்கவே செய்தேன்!

                        நல்பாய்போட்டு

            இலைபோடப்பாக்கி!

                          சிறிதே நீர் அமர்வாய்

            சினம்கொள்ள வேண்டா!

                          அறிவேனே! உன்னை

           இதோ நான் வருவேன்!

(சொன்னவள் சென்று

        பாயுடன் வந்தாள்

கனிவுடன் இலையில்

      தண்ணீரும் தெளித்தாள்

உணவுடன் அவன் முன்

       அமர்ந்தாள் நங்கை

பணிவுடன் இலையில்

       உணவினைப் படைத்து)

பூங்       :     சுவையுள்ள உணவை,

சுவைத்துநீர்! உண்பீர்!

துயில் கொண்டு எழுவீர்!

சுகம்காணக் கொஞ்சம்!

அருண்    :     தரையிலோர் பாதம்,

பதியநீ வைத்து,

                      பரிமாற அமுதாய்,

   அமர்ந்திடும்போது?

                      உண்ணவே எண்ணம்

   ஒருபோதும் இல்லை?

                      ஒன்றொன்றாய் சுவைத்துப்

   பார்க்கவேச் செய்தேன்!

                     குழம்பும் இனிப்பு! காரக்

  கூட்டும் இனிப்பு! குளிர்

                    குழலும் இனிப்பு! கடல்

        உப்பும் இனிப்பு!

                   மோரும் இனிப்பு! ஊறு

    காயும் இனிப்பு! இந்தச்

                  சோறு ம் இனிப்பு! மரக்

   கறியும் இனிப்பு!

    எல்லாமே இனிப்பாய்,

  இருக்கவே செய்தால்,

                  நலமாக உண்ண

  முடியுமா சொல்லேன்?

பூங்       :     பூவிலே உள்ள

  புதுத்தேனெடுத்து!

                    நாவிலே நன்றாய்,

தடவியா வந்தீர்?

    மாஞ்சுவைக் குழம்பும்,

     நல்வகைத் தயிரும்;

               தீஞ்சுவை கூட்டும்,

    பல்வகைக் கறியும்!

                திகட்டுமோ வென்று,

     தேன்மா வடுவும்!

              பகட்டென இன்றி,

 படைத்து நான்வைக்க!

         இனிப்பதாய் அனைத்தும்,

  என்னிடம் உரைத்தால்!

         என்னநான் செய்வேன்?

         என்பதை அறியேன்!

அருண்    :     மனதிலே தேனின்,

  கூடொன்றைக் கட்டி!

                              நனிதளிர்க் கரங்களை

அதிலே நீ இணைத்து

                    மணக்க நீ சமைக்க

பொருளையே தொட்டால்

இனிக்காமல் என்ன?

                   கசக்கவாச் செய்யும்?

                     என்பதை நானே!

இப்போதே அறிந்தேன்!

    கண்ணே நீ! இன்னும்

  அருகினில் வருவாய்!

பூங்       :     விடுங்கள்! ஐயோ!

அழகுள்ள செயலா?

அடுத்தவர் பார்த்தால்,

என்னதான் சொல்வார்?

அருண்    :     நினைப்பவர் நினைக்கட்டும்

  நீ என்ன சின்னஞ்சிறுசா?

                           நன்று நான் இன்று

படித்ததைக் கேளாய்!

பூங்       :     மலராகும் மொட்டு,

             பருவத்தின் வரையில்!

               சிலரோடு என்னை

பள்ளிக்கு அனுப்ப!

          சிறப்புள்ள வாழ்வே

            சிற்றூரின் வாழ்வாய்!

        கற்றோர்கள் எனக்குப்

பாடமாய்ச் சொல்ல!

என் எண்ண நினைவு,

  ஏக்கமே கொள்ளும்!

       மனமென்னும் திரையில்,

காட்சிகள் தோன்றும்!

இன்று நீர் படித்த,

  கவிதையைக் கேட்க!

   நனி என்பள்ளி,

  நினைவிற்கு வரவோ!

  உள்ளமோதுடியாய்,

   துடிப்பதை அறிவாய்!

   மெல்லவே கவிதைக்,

    கருத்தினைச் சொல்வாய்!

அருண்    :     கீறிய கொவ்வைப்

  பழம் போன்ற இதழில்

           ஊறிய தேனோ

  உருண்டோடும் முத்தாய்

       உன் மார்புக் கரையின்

  வாய்க்காலில் ஓட!

ஒன்றும் நான் அறியாப்

  பதரல்ல; சொல்வேன்

 செவ்வாழை சிரிக்க!

தென்னை வரவேற்க!

     சவ்வாது மணக்க!

  சண்பகம் உதிர!

      தென்றலும் வீச

   தேன்மலர் சிந்த!

   மன்றல் தோறும்

மணமே! மணமே!

        வாளைமீன் தென்னங்

   குலையினை முட்ட

    வாள்போல் இளநீர்

  அருகிலே உள்ள

    முற்றிய பலாவில்

  மூர்க்கமாய் பாய!

    குற்றமே இல்லாத்

  தேனங்கே வழியும்!

    வாழைப்பூச் சோற்போல்

  வகையாய் சொரிய!

  தாழையின் மடலோ

தாங்கியே நிற்க!

   வருவோர்க்குப் படைக்கும்,

  வாய்ப்பையே தேடி

    திருமகள் வாசலில்

நிற்பதாய்த் தோன்றும்!

    எருமைகள் கன்றின்

நினைவாலே மாலை

 தெருவெல்லாம் பாலைச்,

  சிந்தியே ஓடும்! முக்கனி எங்கும்,

  சிதறியே கிடக்கும்

    திக்கெங்கும் முத்துகள்,

     குவிந்தே கிடக்கும்!

பூங்       :     அப்பப்பா! என்ன?

அழகுதான் என்பேன்?

    எப்போது இதை நான்,

பார்ப்பதோ அறியேன்;

அருண்    :     கலைஎழில் வாழ்வாம்,

  சிற்றூரின் வாழ்வை

              நிலையான இலக்கியச்

சுவையாகச் சொல்லும்

   எண்ணற்ற நூல்கள்

  இங்குண்டே கண்ணே!

      கண்ணெனக் காத்தல்

கடமையும் அன்றோ?

பூங்       :     ஆமாம் அறிவேன்!

அறிவேனே நானும்!

      பூம்பொழில் போல,

  என்றுமே மணக்கும்!

 

(காட்சி முடிவு)

two-sparrows08two-sparrows08

(பாடும்)