பாடு சிட்டே பாடு ! பண் பாடு ! : காட்சி 30 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

காட்சி – 30 அங்கம்    :    அருண் மொழி, பூங்குயில் இடம்        :    பள்ளியறை நிலைமை    :    (பள்ளிகொள்ள வருகின்ற பூங்குயிலை துள்ளி மெல்ல அணைக்கின்றான்) பூங்    :    என்ன நீர் இன்று பொழுதுக்குள்ளே களைப்பாய் உள்ளீர் உழைத்ததனாலா? அரு    :    என்னடி! உண்ணல் உறக்கம் தவிர்த்தோர் தவிர வேறென்ன வேண்டும்? உழைப்பு நமக்கு! பூங்    :    வெல்வெட்டு மெத்தை பிரித்தே வைத்த மேல் விரிப்பட்டும் தொங்கவே செய்த நல்லதோர் தேக்கங்கட்டிலும் உண்டு! நல்மணம் பரப்பும் பொருள்களும் உண்டு பாலாடையாகப் படி நிறை…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 27 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

காட்சி – 27 அங்கம்    :     அருண்மொழி, பூங்குயில் இடம்      :     அருண்மொழி இல்லம் நிலைமை  :     (பூங்குயில் ஒப்பனை கண்டு அருண் தாங்கா இன்பம் அடைகின்றான்) அருண்    :     பணியாளும் வந்து பல நாழி ஆச்சு! அணியவே இன்னும் நாழிதான் என்ன? பூங்       :     முடியள்ளி முடிக்கும் போதுதான் வந்தான்! துடிப்பதும் ஏனோ? துரிதமே வருவேன்! அருண்    :     ஆகா! என்ன! தேவியே! தேவி! ஓகோ! விண்மீன் வானுடை கட்ட! எங்கும் இன்பம் பொழிகின்ற நிலவாய்! தங்கமுகத்தாலே பார்த்தென்னைச் சிரிக்க! தேவியே! கண்ணே!…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 26 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(வைகாசி 10, 2046, மே 24, 2015 தொடர்ச்சி) காட்சி – 26   அங்கம்    :     கவிஞர், அன்பரசன் இடம்      :     குடிலின் முன்வாசல் நிலைமை  :     (நகையைக் கண்டு நகைத்த கவிஞர் நகைக்கோர் வழியை உரைக்கின்றார்) கவி  :     தாலிக்குத் தவியாய் தவித்தே ஒருவன் பாவியாய் இங்கே வாழ்ந்திடும் போது! பல வேலிக்கு சொந்தக்காரனின் வீட்டில் குவிந்தே கிடக்கும் கொடுமையைப் பாரேன் அன் :     இந்நிலை எதனால் புலவீர்? விந்தையுமன்றோ? கேட்க! கவி  :     போர்முனை அறியா ஒருவர்! இங்கே! இராணுவ…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 25 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(வைகாசி 3, 2015 / மே 17, 2015 தொடர்ச்சி) காட்சி – 25 அங்கம்    :    ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்        :    மரக்கிளை நிலைமை    :    (காட்சியைக் கண்டு சிட்டுகளோ! நகை                     ஆட்சியைக் கண்டு வியக்கின்றது) பெண்  :    பெண்களுக்கென்ன நகையின்மேல் இத்தனை ஆசை உள்ளது சொல்? ஆண்  :    கண்ணே! பெண்ணுக்கு நகைதானே! என்ன அதில்தான் உள்ளதுவோ? பெண்  :    மேலைநாட்டுப் பெண்களுக்கு இத்தனை விருப்பம் இதில் உண்டோ? ஆண் …

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 24 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

 (சித்திரை 27, 2046 / மே 10, 2015 தொடர்ச்சி) காட்சி – 24 அங்கம்    :     அருண்மொழி, பூங்குயில் இடம்      :     அருண்மொழி இல்லம் நிலைமை  :     (ஒப்பனைக்காக அருண்மொழி, அனைத்தும் தப்பாது வாங்கி இல்லம் வருதல்) அரு   :   கொடியே! நீ! வருக! கோவில் நாம் செல்வோம் நொடியும் இனி இல்லை புரிவாய்! நீ கண்ணே! பூங்   :    வாடா மலர்ப் பட்டோ! காஞ்சி செம்பட்டோ! தேடி நான் கட்டி வருகிறேன் அத்தான்! அரு   :   வீடே ஒரு கடையாய் இருந்ததும்…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 23 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(சித்திரை 20, 2046 / மே 03, 2015 தொடர்ச்சி) காட்சி – 23 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     மரக்கிளை நிலைமை  :     (பள்ளி செல்லும் பிள்ளைகள் பற்றி செல்லப்பேடு வினவுது இங்கே) ஆண்   :  என்னப்பேடே! பார்க்கின்றாய்? என்னவோ நாட்டில் நடந்ததுபோல்! பெண்   :  பெற்றோர் தவிக்கும் திங்களென கற்றோர் பலரோ சொல்கின்றார்! ஆண்   :  எங்கும் பள்ளி தொடங்குகின்ற திங்களன்றோ? இத்திங்கள்! பெண் :   வித்தகனாக்கத் தன் பிள்ளையை! அத்தனை துன்பமா? பெற்றோர்க்கு! ஆண்  …

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 21 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

  (சித்திரை 06, 2046 / ஏப்பிரல் 19, 2015 தொடர்ச்சி)   காட்சி – 21 (நாடகக்காட்சி – 7) அங்கம்    :     அருண்மொழி, பூங்குயில் இடம்      :     அருண்மொழி இல்லம் நிலைமை  :     (அருண்மொழி பாடலைக் கேட்ட பூங்குயில் அன்புக் கணவனை ஐயம் கொள்ள திருவளர்ச் செல்வனோ திருத்தியதோடு இன்பத்தைப் பொழியவும் செய்கிறான் ஆங்கே) அரு       :      பொழிபிறை நனி நெற்றி! தோழி!                                                                 எழில் இதழ் கனிக்கொவ்வை! தோழி! வழிகின்ற குழல் அருவி! தோழி! பொழிகின்ற வாய் அமுதம்! தோழி! விழி…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 20– ஆ.வெ.முல்லை நிலவழகன்

(பங்குனி 29, 2046 / ஏப்பிரல் 12, 2015 தொடர்ச்சி)   காட்சி – 20 அங்கம்    :     அன்பரசன், கவிஞர் இடம்      :     குடிலின் முன்வாசல் நிலைமை  :(நாடகக் காட்சி முடிவுபெற “காணோமே எனது பெண்ணைத்தான்” கேட்டது மகளிர் பகுதியிலே அழுகுரல் புலம்பலுமாகவே) காவலர் நிலைமையை சீர்செய்ய அமைதி அமைந்தது ஆங்கே பாவலர்சிறிதும் இவற்றையயெல்லாம் பார்க்காது! ஏதோ! நினைத்திருந்தார் அன்ப   :  மொழிவீர்! என்ன சிந்தனை? மொழியாதிருத்தல் நன்றில்லையே? கவி     :  விழி நீர் சொட்டக் கண்டதனை விளக்கமாய் எடுத்தே உரைக்கின்றேன்!…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 19– ஆ.வெ.முல்லை நிலவழகன்

 (பங்குனி 22, 2046 ஏப்பிரல் 05, 2015 தொடர்ச்சி)   காட்சி – 19   அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :      மரக்கிளை நிலைமை  :     (பேடும் சிட்டும் மனமொன்றி ஈடுபடல் நல் இன்பத்தில்) பெண் :     சீழ்க்கை ஒலியும்! கைத்தட்டலும் வானை முட்டுது! பார்த்தாயா? ஆண் :     வாழ்வில் காண இன்பத்தை வாழ்த்தொலி மூலம் கண்டுவிடும் ஒருவகைக் கூட்டமாய் இருக்கலாம்! என்றே ஆண்சிட்டு விடையிறுக்க (குறுநகை கொண்டு பேடையும் சிட்டின் கழுத்தை நீவியது)   (காட்சி…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 18– ஆ.வெ.முல்லை நிலவழகன்

(பங்குனி 15, 2045 / மார்ச்சு 29, 2015 தொடர்ச்சி)   காட்சி – 18 (நாடகக் காட்சி – 6) அங்கம்    :     அருண்மொழி, பூங்குயில் இடம்      :     பள்ளியறை நிலைமை  :     (கூடலிலே இன்பம் திளைத்த மனமோ தேடியே அதனை நினைக்கச் செய்ய இன்ப நினைவினை அசையாய்ப் போட்டு மென்று உதிர்க்கிறான் வெளியில் அதனை அருண்    :      வெள்ளி ஒளிக் கிண்ணத்திலே பாலின் சுவையிருக்க! கள்ளியவள் கன்னத்திலே கனியின் சாறிருக்க! மதியென வந்தாள்! மதியே நானென்று! சதிரென மொழிந்தாள் சதிரே…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 16– ஆ.வெ.முல்லை நிலவழகன்

(பங்குனி 1, 2046 / மார்ச்சு 15, 2015 தொடர்ச்சி)  காட்சி – 16 (நாடகக் காட்சி : 5 அங்கம்      :      அருண் மொழி, பூங்குயில் இடம்       :      பள்ளியறை நிலைமை   :      (ஊடல் மிகுதியால் கூடிய பின்பு ஓடிய எண்ணத்தை உரைக்கின்றார்! இங்கே!) அருண்      :      கலைவாளர் மதிமுகமே! நிலைபுகழ் எழில் வடிவே! மலைமகள் உருவெடுத்தும் சிலையயன இருப்பது ஏன்? பூங்         :      விடிநிலவும் வந்ததத்தான் விடியுமெனச் சொல்லிவிட துடியிடையும் நோகுதத்தான்! மடியிடையில் நீர் இருக்க!   (காட்சி முடிவு)  (பாடும்)…