கல்வியாளர் வெற்றிச்செழியன்

paventharthamizhpalli@gmail.com

vetrichezhiyan02

 

அஞ்சி அஞ்சி ஒதுங்கிவிட்டால்

            உதுவும் நடக்குமா !

அஞ்சி நாமும் முடங்கிவிட்டால்

            உயிரும் நிலைக்குமா !

 fear05

அச்சம் உள்ள நிலையினிலே

            அமைதி கிடைக்குமா !

அஞ்சி வாழும் மக்களிடை

            மகிழ்ச்சி தோன்றுமா !

 fear04

அச்சம் பெற்ற மூளையிலே

            அறிவு மலருமா !

அஞ்சி வாழும் அடிமையரின்

            கொள்கை பிழைக்குமா !

அச்சம் கொண்ட உறவினிலே

            உண்மை இருக்குமா !

அச்சம் உள்ள உயிர்களிடை

            அன்பு தோன்றுமா !

அச்சம் வாழ்வில் இருக்கையிலே

            கலைகள் முகிழுமா !

அச்சம் கொண்ட மனத்தவர்கள்

            படைக்க முடியுமா !

அச்சம் கொண்டு பிழைகளையே

            ஏற்று அமைவதா !

அச்சம் நம்மை ஆளவிட்டு

            அடிமை ஆவதா !

அச்சம் நீங்க உண்மையெனும்

            ஒளியை ஏற்றுவோம் !

அஞ்சாமல் விடுதலையாய்

            வாழ்ந்து காட்டுவோம் !

olivilakku01