(கவிஞாயிறு தாராபாரதி 19 & 20 தொடர்ச்சி)

 

கவிஞாயிறு தாராபாரதி 21 & 22

 

கவிமொந்தை! கருத்துடந்தை! கள்ளார் சிந்தை!
கால்மறக்கும் மனமந்தை! கனவுச் சந்தை!
செவியுந்தும் தமிழ்ச்சிந்தும்! தேனைத் தந்தும்
திகட்டாத ஒருபந்தம்! தெரியா தந்தம்!
புவியெங்கும் புதுக்கந்தம்! புதிதாய் வந்தும்
புதிரவிழ்க்கும் அவர்சிந்தும்! புலமை முந்தும்!
அவையெங்கும் புகழ்தங்கும்! அவருட் பொங்கும்
அறிவொளியில் இருள்மங்கும்! அவர்பாச் சிங்கம்! (21)

அமிலத்தில் கரைத்தெடுத்த அமுதச் சாற்றை
அளிக்கின்ற பாற்கடல்தான் அவர்தம் பாக்கள்!
கமலத்தின் கள்ளூற்றில் கரைந்த தீப்பூ!
கவிதைக்குள் குறுவாளாய்க் கரந்த சொற்கள்!
விமலத்தின்* வெளிப்பாடு! வெளிச்சத் தேடல்! (*சுத்தம்)
விடியல்கள் அவர்கவிகள்! வேரால் பொய்ம்மை
இமயத்தைப் பொடியாக்க எழுந்த ஆல்கள்!
இதயத்தைக் குடைகின்ற எழுத்துப் பூச்சி! (22)

– சந்தர் சுப்பிரமணியன்

கவிஞாயிறு தாராபாரதி கவிமலர்

(தொடரும்)