பரிசு-கருமலைத்தமிழாழன், பாராட்டு01 ; karumalaithamizhaazhan_parisu01

பாவலர்  கருமலைத்தமிழாழன்  நூலுக்குப்  பரிசு

 தேனி  மாவட்டம்  கம்பத்தில்  37  ஆண்டுகளாகச்   செயல்பட்டுவரும்  பாரதி தமிழ்  இலக்கியப்  பேரவை, ஒவ்வோர் ஆண்டும்  தமிழில்  வெளிவந்த  கவிதை  நூல்களில்  சிறந்த நூலைத் தேர்ந்தெடுத்து  விருதும்,  பொற்கிழியும்  வழங்கிப் பெருமைபடுத்தி வருகிறது.

 2016  ஆம் ஆண்டில்  சூலை மாதம் வரை  வெளிவந்த  கவிதை  நூல்களில்  ஓசூரைச் சேர்ந்த  பாவலர் கருமலைத்தமிழாழன்  எழுதிய  ‘செப்பேடு’   மரபுக் கவிதை நூலை  இவ்வாண்டின் சிறந்த  நூலாகத்   தேர்ந்தெடுத்தது.  ஆடி 31, 2047 / 15 -08 – 2016  திங்களன்று.  கம்பத்தில்  பேரவைத் தலைவர் கவிஞர்  பாரதன்  தலைமையில்  நடைபெற்ற  விருது  வழங்கும்  விழாவில்   உலகத்தமிழ்ச்சங்கத்தின் இயக்குநர்  முனைவர்  கா.மு. சேகர், பரிசு  பெற்ற  பாவலர் கருமலைத்தமிழாழனுக்கு  விருதும், பொற்கிழியும்  வழங்கிச் சிறப்பித்தார்.

   கிழக்கு வாசல் உதயம்  இலக்கிய  மாத  இதழின்  ஆசிரியரும் சிறந்த  சிறுகதை  ஆசிரியருமான  உத்தமச்சோழன்,  இனிய நந்தவனம்  இலக்கிய  மாத இதழின்  ஆசிரியர்  சந்திரசேகர்  ஆகியோர்  பரிசு பெற்ற  பாவலரை வாழ்த்திப்  பேசினார்கள்.

 முடிவில் பேரவைச் செயலர் ஆதித்தன்  நன்றி கூறினார்.

பரிசு-கருமலைத்தமிழாழன், பாராட்டு02 ; karumalaithamizhaazhan_parisu02 பரிசு-கருமலைத்தமிழாழன், பாராட்டு03 ; karumalaithamizhaazhan_parisu03

செய்தி: கருமலையன்பன்