தமிழர் பண்பாட்டுக் கழகம், முன்சன்-யேர்மனி

தியாகி பொன் சிவகுமாரன் நினைவுக்கிண்ணச் சுற்றுப் போட்டிகள்

germany_sports_symbol

யேர்மன் தேசியக்கொடி, தமிழீழ தேசியக் கொடியேற்றலுடன்தொடங்கியது.உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டப் போட்டிகளில் நியூரென்பர்கு, ஆலென், மூன்சென்(Nürenburg, Alen, München) நகரங்களிலிருந்து வீரர்கள் கலந்து கொண்டு கடும் போட்டிகளுக்கு மத்தியில்தங்களின் விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்தினார்கள்.

germany_sivakumaran_sports06 germany_sivakumaran_sports05

பார்வையாளர்களின் ஆரவாரமான ஊக்கமும், உற்சாகமும் விளையாட்டு வீரர்களை மேலும்சிறப்பாக ஆடவைத்ததால், அவர்கள் வெற்றி மகிழ்ச்சியில் திளைத்தார்கள். இறுதியில்பரிசளிப்பில் முன்சன்-தமிழாலய நிருவாகி, ஆசிரியைகள், தமிழர் பண்பாட்டுக்கழகத்தவர்கள் வெற்றி வீரர்களுக்கு, பதக்கங்கள், கிண்ணங்களை வழங்கிமதிப்பளிப்பு செய்தார்கள் இவ்வண்ணம் நிகழ்வுகள் இனிதே நிறைவேறிற்று.

germany_sivakumaran_sports04 germany_sivakumaran_sports03

பங்குபற்றிய விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் யாவர்க்கும் தமிழர்பண்பாட்டுக் கழகம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

 germany_sivakumaran_sports02 germany_sivakumaran_sports01

தரவு : எங்கள் ஈழம் இது தமிழீழம்