வட்டக்கோட்டை விழா09 :vattukottaiviahaa09

வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்) சங்கம்

மிதிவண்டிகள், தையல் பொறி வழங்கியது!

 வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்)சங்கத் தலைமைச்செயலகத்தில்  பாடசாலை மாணவர்கள் நான்கு பேருக்கு  மிதிவண்டிகளும் ஒருவருக்குத் தையல்பொறியும் வழங்கப்பட்டுள்ளன.

  சங்கத் தலைவரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வட்டு இந்துஇளைஞர்(வாலிபர்) சங்கத்திடம் தமது கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி புரியும் முகமாக  மிதி வண்டிகள், தையல் இயந்திரம் என்பன தந்துதவுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வட்டு இந்துக் கல்லூரி, வட்டு  மத்திய கல்லூரி, வேம்படி உயர்தர மகளிர் பாடசாலை, மூளாய் சுப்பிரமணிய வித்திய சாலையைச் சேர்ந்த மாணவர்களுக்கு  இவை வழங்கப்பட்டுள்ளன.

  மேலும் வட்டு இந்துக் கல்லூரி சிறப்புக் கல்வி பயில்வோரின் அலகிற்குத் தையல்பொறியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்கான நிதி அன்பளிப்புக்களை வட்டுக்கோட்டையச் சேர்ந்த வள்ளிபுரம் (36500ரூபா) மானிப்பாயைச் சேர்ந்த நாகமணி இராயேசுவரி (10,000 உரூபா), புலம்பெயர் உறவுகளான இந்தியாவைச் சேர்ந்த அழகர் ஈசுவரன் (15,000ரூபா) அமெரிக்காவைச் சேர்ந்த சி.சிவநாதன் (10,000ரூபா)  ஆகியோர் வழங்கியிருந்தனர்..

  எமது மாணவச் செல்வங்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக உதவிய உறவுகளுக்கு எமது சங்கத்தின் சார்பிலும் மாணவர்கள் மற்றும் பாடசாலைகளின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றோம்.

மாணவர்கள் விபரம்:

செ.பிரசயானினி   வேம்படி மகளீர் உயர்தரப் பாடசாலை தரம் 6

செ.கசனிகா    வட்டு மத்தியக் கல்லூரி           தரம் 9

யெ.யெசின்    மூளாய் சுப்பிரமணிய வித்தியசாலை  தரம் 5

ப.மதனிகா     வட்டு இந்துக் கல்லூரி           தரம் 6

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]