மலர்க்கொடி அன்னையின் மலரடி போற்றி!
யார்அர செனினும் தமிழ்க்குக் கேடெனில்
போர்முர சார்த்த வீறுடை மறவர்
இலக்குவனாரின் இனிய துணையாய்
செருக்களம் நோக்கிச் செல்கென விடுத்த
தருக்குடை மறத்தி;தமிழ்நலன் காக்கும்
விருப்புடன் துணைவர் சிறைக்களம் புகினும்
பொறுப்புடன் மக்கள் சுற்றம் காத்திடும்
பெருந்துணை நல்லாள்; இல்லம் ஏகிய
மறைமலை அடிகளும் திருக்குறளாரும்
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. அவர்களும்
வள்ளுவர் காட்டிய வாழ்க்கைத் துணையாய்
விருந்து பேணிடும் குறள்நெறிச் செம்மல்
என்று பாராட்டிய ஏந்திசை நல்லாள்;
கலக்கம் ...