(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 57 : தமிழினமும் குரங்கினமும்-தொடர்ச்சி)
பூங்கொடி
மலையுறையடிகள் வாழ்த்திய காதை
தொண்டர்க்கு வேண்டுவன
தொண்டுபூண் டார்க்குத் தூயநல் லுளனும்,
கண்டவர் பழிப்பாற் கலங்கா உரனும்,
துயரெது வரினும் துளங்கா நிலையும்,
அயரா உழைப்பும், ஆயும் அறிவும்,
தந்நல மறுப்பும், தகவும் வேண்டும் 105
இந்நல மெல்லாம் ஏற்றொளிர் நீயே;
இருளும் தொண்டும்
விளக்கிடை நின்றான் வீங்கிருள் புகுவோன்
துளக்கம் கொள்வான்; துணைவிழிப் ...