வா, தமிழா! தமிழா!
வா, தமிழா தமிழா ஒன்று கூடிடுவோம்
கேள், தமிழா தமிழா துயிலெழுந்திடுவோம்
வாளெடுத்து வா தோழா
அந்தப் பகையை வென்று முடிப்போம்
தோள்கள் சேர்த்து வா தோழா
நம் தேசத்தைக் காத்திடுவோம்
எமனையும் கண்டு அஞ்சோம்
பனங்காட்டுப் புலியிது என்போம்
நெற்றியில் இந்த மண்ணை
நாம் திலகமாகச் சுமந்திடுவோம்
வா, தமிழா தமிழா ஒன்று கூடிடுவோம்
கேள், தமிழா தமிழா துயிலெழுந்திடுவோம்
ஆயிரம் நாடுகள் அன்று
நம்மைச் சுற்றியழித்தது பழங்கதையே
தீரத்துடன் நாம் ...