விரைவில் எழுந்து இழந்ததை மீட்போம்!
சடலம் ஆக்கிச் சிதைத்தானோ? ஐயோ!
சிதைத்துச் சடலம் ஆக்கினானோ?
சுவரில் அடித்த செம்மண் கலமாய்,
சிதறிக் கிடந்த உடல்கள் மீது,
சிறுநீர் கழித்தும் அடங்கா வெறியில்,
சிரங்களை அறுத்து ஒருபுறம் குவித்து,
சித்திரம் போன்ற நம்குலப் பெண்களின்,
செந்தமிழ் மார்பை அறுத்தானே! நீசன்,
செந்தமிழ் மார்பை அறுத்தானே! நாமும்
செய்வ தறியாது திகைத்தோமே!
சிதிலம் அடைந்த உயிர்கள் கண்டு,
விதியென் என்றொதுங்கி வீழ்ந்திட மாட்டோம்,
உதிரம் கொதித்துத் தமிழன்னை ...