வையகத் தமிழ் வாழ்த்து
பாரதக் கண்டச் சீரிளம் தமிழே !
ஓரினம் நாமெலாம்
ஒரு தாய் மக்கள்
வாழ்த்துவம் உனையே !
வணங்குவம் உனையே !
தாரணி மீதில் உன்
வேர்களை விதைத்தாய்
வேர்கள் தழைத்து
விழுதுகள் பெருகின
ஈழத் தீவில்
இணைமொழி நீயே
சிங்கப் பூரினில்
துணைமொழி நீயே
மலேசிய நாட்டில்
தனிமொழி யானாய்
காசினி மீதில் தமிழர் பரப்பிய
காவியத் தமிழே !
வாழ்த்துவம் உனையே !
வையகத் தமிழே !
வணங்குவம் உனையே !
ஆத்திசூடி ஓளவையார்,
ஆண்டாள்,
வையகப் புலவர்
வள்ளுவர், இளங்கோ,
பாரதி, ...