- பைந்தமிழ்ப் பாவலர் அ.கி.பரந்தாமனார்
திருமணக்கும் கலைமணக்கும் திருத்தொண்டை நாட்டில்
சிறப்புமிகப் பெற்றிலங்கும் திருக்காஞ்சி நகரம்
பெரும்புகழை எய்திடவே பிறந்த பேரறிஞ,
பிறர் இகழ்ச்சி தனை மறக்கும் பெருஞ்சால்பு மிக்கோய்,
ஒரு கடவுள் உளத்திருத்தி உறுமூடக் கருத்தை
ஒழித்துவிடப் பாடுபடும் ஒப்பரிய தொண்ட,
இருங்கடல்சூழ் இவ்வுலகில் நீடுழி வாழி!
எழுத்தாள! அண்ணாவே, நீடுழி வாழி!
இந்தி வந்து புகுவதனால் இனிய தமிழ் சாகும்
என்றறிஞர் பெருமக்கள் எடுத்தெடுத்துச் சொலினும்
அந்த இந்தி ...