புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.56-60

(இராவண காவியம்: 1.2.51-55 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம் மருதம். வேறு 56.கல்லிடைப் பிறந்த யாறுங் கரைபொரு குளனுந் தோயும், முல்லையம் புறவிற் றோன்று முருகுகான் யாறு பாயும், நெல்லினைக் கரும்பு காக்கும், நீரினைக் கால்வாய் தேக்கும், மல்லலஞ் செருவிற் காஞ்சி வஞ்சியு மருதம் பூக்கும். 57.சேற்றினை யுழுவார் சேற்றிற் செந்நெலை விதைப்பார் செந்நெல் நாற்றினை நடுவார் நாற்றின் நடுக்களை களைவார் நன்னெல் தூற்றினை யறுப்பார் தூற்றின் சுமையினைச் சுமப்பார் சுற்றும் ஏற்றினை யுகைப்பா ரேற்றி  னிகல்வலி…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.51-55

(இராவண காவியம்: 1.2.46-50 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம் பாலை   51.கடிக்கமழ் மராமலர்க் கண்ணி யஞ்சிறார் படிக்குற வெருத்துக்கோ டன்ன பாலைக்காய் வெடிக்கவிட் டாடிட விரும்பிக் கோலினால் அடிக்குமோ சையிற்பருந் தஞ்சி யோடுமே. 52.பொருந்திய நண்பகற் போதிற் காளையின் திருந்திழைக் கன்னியுஞ் செல்லக் கண்டுமே இருந்துமே யெம்மனை யின்று நாளை நீர் விருந்துண்டு சென்மென வேண்டிக் கொள்வரே. தோட்டுணை யாகவே சுரிமென் கூந்தலைக் கூட்டியே செல்பவன் குற்ற மற்றவன் ஆட்டிநீ ‘பிரிக்கலை’ யென் றவ் வன்னையை…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.46-50

(இராவண காவியம்: 1.2.41-45 தொடர்ச்சி)   இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம் முல்லை & பாலை கொன்றையம் புறவிடைக் கொடியின் மின் னரி வான் குன் றுறை யிளையகார் குறுகி மாலையிற் சென்றவர் வரவெதி நள்ளிச் செவ்வியர் முன் றிலி லிறைகொள் முல்லை யோங்குமால்,   பாலை எல்லிய முது வெயி லெறிப்படி நல்வள முல்லையுங் குறிஞ்சியும் முறைமை தப்பியே நல்லியல் பிழந்தற நலிவு செய்திடும் பல்லவங் கருகுவெம் பாலை காணுவாம். வற்றிய விருப்பையும் வதங்கு மோமையும் துற்றிய…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.41-45

(இராவண காவியம்: 1.2.36-40தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம் முல்லை கொல்லியந் தேனெனுங் குதலை வாய்த்தமிழ்ச் சொல்லியர் முத்தொடு துனிவு கொண் டொளிர் பல்லென மலர்ந்தவர் பணியத் தோள்பெறும் முல்லையம் புறவடர் முல்லை காணுவாம். பூவையுங் குயில்களும் பொலங்கை வண்டரும் பாவிசை பாடமுப் பழமுந் தேனுந்தந் தேவிசை பெறுங்கடற் றிடையர் முக்குழல் ஆவின மொருங்குற வருக ணைக்குமால். மக்களுக் குணவிட வளைக்கை யாய்ச்சியர் கக்கமுக் கிடத்தயிர் கடையு மோசைகேட் டக்கறைக் கொண்டு பார்ப் பணைக்கும் பேடையைக் கொக்கரக் கோவெனக்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.36-40

(இராவண காவியம்: 1.2.31-35 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம் குறிஞ்சி 36. அடுப்பிடு சாந்தமோ டகிலின் நாற்றமும் துடுப்பிடு மைவனச் சோற்றி னாற்றமும் மடுப்படு காந்தளின் மணமுந் தோய்தலாற் கடைப்படு பொருளெலாங் கமழுங் குன்றமே. 37. தண்டமி ழகமெனுந் தாயின் மங்கலங் கொண்டணி விழவயர் குறிச்சி முன்றிலிற் றொண்டக முழங்கிடத் தோலின் யாக்கையர் கண்டெனு மொழிச்சியர் களிப்ப வாடுவர். 38. சந்தன முன்றிலிற் றங்கை பாவையை மந்திகை செய்துள மகிழச் செய்யுமால்; குந்தியே கடுவனுங் குழந்தை முன்மட…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.31-35

(இராவண காவியம்: 1.2.26-30 தொடர்ச்சி) 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் ஐந்நிலம் – குறிஞ்சி வேறு 31.இவ்வகை நான்குட னியன்று பல்வளந் துவ்விய தமிழகத் துணிந்த மேலவர் செவ்விய முறையினிற் சென்ற வைந்நிலக் குவ்வையின் முதலிய குறிஞ்சி காணுவாம். 32.இடிகுரல் யானைதன் னிளைய வின்னுயிர்ப் பிடிபசி களைந்திடப் பெரிய யாக்கிளை முடியது படியுற முறிக்கு மோசையாற் படிசிறு கிளியினம் பறந்து செல்லுமால். 33.அருவிய முருகிய மார்ப்பப் பைங்கிளி பருகிய தமிழிசை பாடப் பொன்மயில் அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை மருவிய குரக்கினம்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.26-30

(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 21-25 தொடர்ச்சி) 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் கிழக்கு நாடு   26. மஞ்சுதவழ் தருமேற்கு மலைத்தொடர்கீழ்ப் படமேற்கில் விஞ்சுபுகழ்ப் பெருஞ்சேர வேந்தரிருந் தினிதாண்ட வஞ்சியெனப் பெயர்பூண்ட மலிவளத்த திருநகரைக் கொஞ்சுதலை ஈகராகக் கொண்டதுவா லிதன்கீழ்பால். கிழக்கு நாடு 27. சிங்களஞ்சா வகமுதலாந் தீவுகளும் திரையோவா வங்கவிருங் கடற்பரப்பும் மரஞ்செறிகான் மலையருகச் செங்கரும்புஞ் செந்நெல்லுஞ் செருக்கொடுவான் றொடவிகலும் பொங்குவள வயல்மருதம் புனைநாடாப் பொலிந்ததுவே. 28. அம்மருத வளநாட்டி னணிநாகை யெனுநகரில் மும்மதிலின் கோயிலிடை முறைதிறம்பா…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.21-25

(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 16-20 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் திராவிடம் 21.அந்நகரம் பஃறுளியாற் றங்கரையி லுலகிலுள்ள எந்நகரு மிந்நகருக் கிணையாகா தெனும்படிக்குத் தன்னிகராந் தமிழ்வளர்க்குந் தலைக்கழக மோடுதமிழ் மன்னர்களும் புலவர்களும் வாழ்நிலையா விருந்ததுவே,   திராவிடம் 22.அந்நாட்டின் வடக்காவா னணிவிந்த மதன்றெற்கா நன்னாட்டின் முன்னாட்டு நாடாநன் னலங்காட்டும் பன்னாட்டு முன்னீட்டும் பயன்காட்டும் படியமைந்த தென்னாட்டின் வடகாடாந் திருநாடு திகழ்ந்ததுவால், 23.மலைப்பிறந்து கற்றவழ்ந்து மலைச்சாரல் வழிநடந்தே இலைப்பரந்த நறுமுல்லை எதிர்கானத் திடைவளர்ந்து தலைப்பிறந்த வளமருதந்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.16-20

(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 11-15 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் தென்பாலி 16 இடைநில மைந்துநா றெண்ணரு கல்லிற் படவொளி மேய பவளமு முத்தும் கொடுகுட நாட்டுக் கொழும்பொரு ளோடு கடல்வளங் கண்டு களித்ததந் (நாடே,   பெருவளம் தென்பாலி 17.குணகரை குன்றங் குறும்பனை யோடு மணமிகு தெங்க மதுரைமுன் பாலை இணருபின் பாலையோ டேழ்தலை மேய உணவமல் நாற்பதோ டொன் பது நாடே. 18.கொல்லம் தோடு குமரி முதலா மல்லன் மிகும்பன் மலைவள…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.11-15

(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 6-10 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் பெருவளநாடு 11.அம்மலைத் தெற்கி னணிமுகில் மேயும் செம்மலை வீழ்க்குந் திரடொடர் மேய பன்மலை யோடு பழந்தமிழ் நாட்டு மன்மலை யாத மணிமலை யோங்கும். 12.அத்தொடர்க் குன்றத் தருமக வாகி முத்தமி ழாளர் முதுநெறி போலப் பத்தி யறாதுசெல் பஃறுளி யாறு புத்துண வாக்கிப் புதுவிருந் தாற்றும். 13.மைளம் பட்ட வளக்கும் ரிக்கும் நொய்வளம் பட்டவைந் நூறுகற் றெற்கில் பைவளம் பட்டநீள் பஃறுளி யாறு…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1. தமிழகக் காண்டம், 2. தமிழகப் படலம். 6-10

(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 1-5 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் பெருவளநாடு 6. தன்கடன் குன்றித் தமிழகங் கொண்ட தென்கடல் முன்பு செழுந்தமிழ் நாடா நன்கட னாடு நனிவளந் தேங்கிப் பொன்கட னாடப் பொலிந்தது காணும்.   ++ கடல்நாடும் கடலும் விரும்பும், பொன் கடன்’ நாடக செல்வம் கடன் கேட்க, ++ 7. ஆயிரங் கல்லி னகன்ற பரப்ப தாயய னாட ரவாவுற, நீங்கிப் போயல ரேங்கப் பொலிவுறு செல்வம் தாயது பண்டக…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1. தமிழகக் காண்டம், 2. தமிழகப் படலம்

(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 31-37 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம்   வேறு 1. தெண்டிரை மூன்று திசையுனுங் காப்ப வண்டமிழ் விந்த மலைவடக் கார்ப்பப் பண்டுந முன்னர் பயன்பட வாழ்ந்த தண்டமிழ் வேலித் தமிழகங் காண்பாம்.   2. நனிமிகு பண்டுநர் நற்றமிழ்ச் செல்வி பனிமலை காறு. பகைசிறி தின்றி இனிதுயர் வெண் குடை நீழ லிருந்து தனியர சோச்சித் தமிழகங் காத்தாள்.   3. சீரியல் வாய்ந்த செழுந்தமி ழன்னை மாரி வழங்கும்…