ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்! கேட்டாரையும் கேளாரையும் பிணிக்கும் நாவரசர் ஒளவை நடரசான் அவர்களின் எண்பத்தைந்தாவது பிறந்தநாள் பெருமங்கலம் இன்று(24.04.2020). அவரிடம் அலைபேசியில் பேசும் பொழுது “புதுச்சொல் புனையும் திறனாளர் பல்லாண்டு வாழ்க” என வாழ்த்தி மகிழ்வித்தார். நான், மதுரையில் உள்ள தியாகராசர் நன்முறை உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயின்ற பொழுது அவர் ஒரு நிகழ்ச்சிக்கு வந்து உரையாற்றினார். அவருடைய தம்பி மெய்கண்டான்,(இப்பொழுது குழந்தைகள் நரம்பியல் மருத்துவ வல்லுநர் முனைவர் ஒளவை மெய்கண்டான்) என்னுடன் படித்தார். மிகவும் சிரிப்பாகவும் கல்வியை வலியுறுத்தியும் சிறப்பாக…
நானிலம் புகழும் நாவரசர் ஒளவை நடராசன் – இலக்குவனார் திருவள்ளுவன்
நானிலம் புகழும் நாவரசர் ஒளவை நடராசன் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மிக்க சிலருள் ஒருவர் அறிஞர் முதுமுனைவர் ஒளவை து.நடராசன்; எந்தத் தலைப்பாக இருந்தாலும் கையில் எந்தக் குறிப்புமின்றிச் சிறப்பாகப் பேசும் சீரிய சிந்தனையாளர்; பட்டிமன்றங்கள், பொது நிகழ்ச்சிகள் வாயிலாக நாடறிந்த நல்லறிஞராகத் திகழ்பவர். நகைச்சுவையாகப் பேசும் பலரும் அந்தந்த நேரத்திற்கான ஆரவாரத் துணுக்குகளை உதிர்ப்பவர்களாக உள்ளனர். அவ்வாறில்லாமல், நகைச்சுவையாக, அதே நேரம் அறிவார்ந்த கருத்துகளைப் பேசும் நாவரசர். இவரது உரை வளமும் குரல் வளமும் கேட்டவர்களை இவர்…
செம்மொழி என்னும் போதினிலே …! – முனைவர் ஒளவை நடராசன்
(சூன் 6 – தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்) “ஆங்கிலம் பேசும் அமெரிக்க நாட்டுப் பேராசிரியராகிய நான் ஆர்வேடு பல்கலைக்கழகத்தில் வடமொழியில் பட்டம் பெற்றேன். இலத்தீன், கிரேக்க செம்மொழிகளை அறிந்து கற்றேன். கிழக்காசிய மொழிகள் துறையில் பணியாற்றியதால் இந்திய மொழிகள், பிற ஆசிய மொழிகளின் இலக்கியச் சிறப்புகளையும் அறிந்தேன். பன்மொழிப் புலமையின் பின்னணியில் செம்மொழி தகைமையைச் சீர்தூக்கும் தகுதி எனக்கு உண்டு. செவ்வியல் இலக்கியங்களைக் கொண்ட மொழிகளில், தமிழ் சிறப்பான இடம் பெற்றுள்ளது என்பதை எந்தத் தயக்கமுமின்றி உறுதியாக என்னால் எடுத்துச் சொல்ல முடியும்….
இலக்கியச் சிந்தனையின் 49ஆம் ஆண்டு நிறைவு விழா
சித்திரை முதல் நாள், 2050 14-4-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 ஏவி.எம். இராசேசுவரி கல்யாண மண்டபம் இராதாகிருட்டிணன் சாலை, சென்னை -4 இலக்கியச் சிந்தனையின் 49ஆம் ஆண்டு நிறைவு விழா ஆதி இலட்சுமணன் நினைவுப் பரிசு பெறுநர் : ஒளவை நடராசன் சிறந்த நூல் பரிசு பெறுநர்: திரு நல்லி குப்புசாமி திரு வெ.இறையன்பு இ.ஆ.ப. சிறந்த கதைக்கான பரிசு பெறுநர் : திரு சி.முருகேசு பாபு சிறப்புரை : திருமதி விசாலாட்சி சுப்பிரமணியன்– கலைஞரின் புதினங்கள்
புலவர் தி.வே.விசயலட்சுமியின் இரு நூல் வெளியீடு
புலவர் தி.வே.விசயலட்சுமியின் இரு நூல் வெளியீடு உலகத் திருக்குறள் மையத்தின் எதிர்காலத் திருக்குறள் எழுச்சி விழா வள்ளுவர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்டாசி 30, 2046 / 17.10.2015 காலை 10.00மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆய்வியல் நிறைஞர், புலவர் தி.வே. விசயலட்சுமி எழுதிய `திருக்குறள் அலைகள்’, `ஒரு வரியில் வள்ளுவம்’ என்ற இரு நூல்கள் மேனாள் துணைவேந்தர் முனைவர் ஒளவை நடராசன் அவர்களால் வெளியிடப்பட்டன. அமுதசுரபி ஆசிரியர் முனைவர்திருப்பூர் கிருட்டிணன் நூல்களைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார். பேராசிரியர் முனைவர்…