பொங்கி எழு தமிழா பொங்கி எழு! – கவிச்சிங்கம் கண்மதியன்

  கரைக்காயைப் போன்றிருக்கும் ஈழ நாட்டில் கண்டைக்காய் என நினைத்துத் தமிழர் தம்மை  வெறிநாயாய்க் கடித்திங்கே குதறி மாய்த்தான்! வெந்தணலில் இராசபக்சே குளியல் போட்டான்! அரக்கனந்தக் கொடியவனின் இலங்கை நாடா அமைதிபுத்தன் அறத்தினையும் போற்றும் நாடு? கரைமீதில் எழுந்தகடல் சுனாமி போல கயவனவன் மனிதநேய மாண்ப ழித்தான்! விண்மழையாய்க் குண்டுமழை கொத்துக் கொத்தாய் விழுந்ததடா அப்பாவித் தமிழர் மேலே! புண்மீது நெருப்பானான் இராச பக்சே! புத்தனுக்கே களங்கத்தைச் சேர்த்த ‘கோட்சே’! பெண்டிர்தம் கற்புமங்கே குரங்கின் கையில் பிடிபட்ட மாலையாகிப் பிய்ந்த தாச்சே! கண்விழித்துப் பூமி…