கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 77: 16. எழிலியின் வரலாறறிந்த காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 76 : தமிழிசை தழைக்கும் – தொடர்ச்சி) பூங்கொடி 16. எழிலியின் வரலாறறிந்த காதை இசைச் செல்வி           கன்னித் தமிழின் நன்னலங் காப்போய்! தன்னலம் விழையாத் தையல் எழிலிதன் திறமுனக் குணர்த்துவென் செவ்விதிற் கேண்மோ! அறமனச் செல்வி, அழகின் விளைநிலம்               எழிலி எனும்பெயர்க் கியைந்தவள், அவள்தான்  5           இசையால் உறுபே ரிசையாள், பிறமொழி இசேயே பாட இசையாள், தமிழில் ஒன்றெனும் இயலும் ஓதித் தெளிந்தவள், மன்றினில் நிறைவோர் மகிழ்ந்திடப் பாடலில்              ஒன்றிய பொருளின்…

மரம் சாய்ந்து போனதம்மா – அரங்க கனகராசன்

மரம் சாய்ந்து போனதம்மா – அரங்க கனகராசன்  [காதல் மணம்… கண்ணாளனைப் பொய்வழக்கில் சிக்கவைத்து சிறை அனுப்புகின்றனர் மணமகளின் தந்தை… சிறைவாசம் முடிந்து, திரும்பியபோது மனைவி ஓராண்டு கைகுழந்தையோடு இருக்கிறாள்… மனத்தால் இணைந்த இருவரும், மீண்டும் ஊருக்குத் தெரியாமல் ஓடுகின்றனர்… மோப்பம் பிடித்த, மணமகளின் தந்தையோ, தானூர்தி வரும் பாதையில், வெட்டிய மரம்தனை சாய்க்கிறார்… தானூர்தி நொறுங்குகிறது… கூடவே காதலர் இருவரும் மரணம் தழுவிட, இருவரது சடலமும் இரத்தம் தோய்ந்து தெருவில் கிடக்கிறது… இது எதுவுமே அறியாத பச்சிளங்குழந்தை, தாயின் மார்பை கவ்வுகிறது, பசிக்காக……