பறவைகளை, மக்களை நேசிப்பவரா?அப்படியானால், இதைப் படியுங்கள்! “பறவைகள், தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்று மட்டும் இல்லாவிட்டாலும், இந்த உலகம் மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதி இல்லாமல் ஆகிவிடும். சென்னை போன்ற நகரங்களில் பறவைகள், பட்டாம்பூச்சி இனங்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. நமது இயல்பான வாழ்க்கையை அவை சுட்டிக்காட்டுகின்றன. நம்மை சுற்றியுள்ள பறவைகளின் மூலம், நமது வாழ்க்கையின் எதிரொளிப்புகளை கவனிக்க முடியும். அனைவருமே முடிந்த வரையில், தமது வீடுகளில் உள்ள தோட்டம், மரம், செடிகள், மேல் மாடி அல்லது கூரைகளில் வசிக்கும் பறவைகளுக்கு…