தமிழ்நாடு – கவிஞர் தமிழ்ஒளி

தமிழ்நாடு புதுமை கண்டு வாழ இன்று போர் செயுந் தமிழ்நாடு – மறப் போர் செயுந் தமிழ்நாடு – மிக முதுமை கொண்ட பழமை வீழ மோதிடும் தமிழ்நாடு – வீழ மோதிடும் தமிழ்நாடு! திசையை, விண்ணை, வென்று நின்று சிரித்திடுந் தமிழ்நாடு – எழில் சிரித்திடுந் தமிழ்நாடு – கொடி அசைய உயர மண்ணில் நிற்கும் கோபுரம் தமிழ்நாடு – கலைக் கோபுரம் தமிழ்நாடு! காவிரிநதி பாயுங் கழனிக் கண்ணொளி பெறும்நாடு – முக் கண்ணொளி பெறும்நாடு – பொழில் பூவிரிநறும் புனல்வி…

மாணவத் தோழர்களே! இளம் போத்துகளே! – வே.ஆனைமுத்து

மாணவத் தோழர்களே! இளம் போத்துகளே! தமிழைக் காப்போம் வாருங்கள்! தமிழால் வாழ்வோம் வாருங்கள்! அன்பார்ந்த மாணவத் தோழர்களே! கட்டிளங் காளைகளே! இளம்போத்துகளே! 18 அகவைக்கு மேல் 35 அகவை வரை உள்ள ஆடவரும் மகளிருமே மக்கள் தொகையில் அதிகம் பேர், எப்போதும் இந்த விழுக்காடு அதிகம் மாறுவது இல்லை. தமிழ்நாட்டு மக்கள் தொகை 7.5 கோடி. இவர்களில் தமிழ் பேசுபவர்களே அதிகம் பேர். தெலுங்கையும், மலையாளத்தையும். உருதுவையும், இந்தி, மார்வாரியையும் பேசுவோர் எல்லோரும் 7, 8 விழுக்காட்டினர் இருக்கக்கூடும். தமிழ்மொழியில் கடலளவு பழந்தமிழ் இலக்கியங்கள் உண்டு. அவை பெரிதும் பாடல்கள்….

வேட்பாளர்களும் வாக்காளர்களும் பங்கேற்க வேட்பாளர் மேடை

  வேட்பாளர்களும்  வாக்காளர்களும் பங்கேற்க வேட்பாளர் மேடை     வரும் சட்டமன்றத்தேர்தலில்(2016) தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க ‘வேட்பாளர் மேடை’ என்னும் புதிய பகுதி (அகரமுதல மின்னிதழில்) தொடங்கப்படுகிறது.   வாக்காளர்களும் தங்கள் தொகுதிக்கு எத்தகைய வேட்பாளர் வரவேண்டும் என்று தங்கள் விருப்பத்தைத்தெரிவிக்கலாம்.   தத்தம் ஒளிப்படம், முகவரி, தொலை பேசி, அலைபேசி எண்கள் விவரங்கள், மின்னஞ்சல், சார்ந்துள்ள கட்சி அல்லது அமைப்பு அல்லது தற்சார்பு  (சுயேச்சை) விவரம், தொகுதி விவரம், தேர்தல் சின்னம் தெரிவிக்கப்படவேண்டும்.  …

தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டன – இராசேசு இலக்கானி

தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் சைதி, தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல்  நாளை அதிகாரப்பூர்மாக அறிவித்தார். இதன் தொடர்ச்சியாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் இராசேசு இலக்கானி தேர்தல் நடத்தைவிதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டன எனக்கூறிப் பின்வருமாறு தெரிவித்தார்: தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதுமே, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டன *தேர்தல் பரப்புரை ஆற்றுவோர், வெவ்வேறு சாதி, சமயம், மொழி அல்லது சமுதாயத்தினருக்கு இடையே, இப்போதுள்ள கருத்து வேறுபாடுகளை பெரிதுபடுத்தும், ஒருவருக்கொருவர் வெறுப்புணர்வை ஏற்படுத்தும்…

தேர்தல் அட்டவணை 2016, தமிழ்நாடு

2011இல் தேர்ந்தெடுக்கப்பட்ட பதினான்காவது தமிழகச் சட்டசபையின் பதவிக்காலம் 22, மே 2016 அன்று நிறைவடைகிறது. இதனால் 15 ஆம் சட்டமன்றத்தை அமைப்பதற்கான தேர்தல் குறித்துத் தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது.

தமிழில்லா அறமன்றம் யாருக்காக? – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழில்லா அறமன்றம் யாருக்காக?   நீதிக்காகக் குரல் கொடுப்பவர்கள் தண்டிக்கப்படலாமா?   தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கான நீதிமன்றங்களின் செயல்பாடுகள் தமிழில் அமைவதுதானே உண்மையான அறமாகும். குற்றஞ்சாட்டப்பட்டவர், எதிர்த்தரப்பார், இரு தரப்பினரின் சான்றுரைஞர்கள் எனனத் தொடர்புடையவர்கள் தங்கள்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு, பிற செய்திகளைப்பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ள  அவர்களுக்குப் புரியும்படித் தமிழில் அமைவதுதானே மு‌றையாகும். ஆனால், இதற்கு மாறான நிலை நம்நாட்டில் நிலவுகின்றதே!  தமிழக உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடுமொழியாக இருக்க வேண்டும் என இந்திய அரசியல்யாப்பின்படிதான் நாம் வேண்டுகிறோம். இந்திய அரசியலமைப்புச்சட்டம் பிரிவு  348(2) இன்படி, …

தோட்டக்கலையின் தாயகம் தமிழ்நாடே! – ச.கு.கணபதி

தோட்டக்கலையின் தாயகம் தமிழ்நாடே!   எந்தநாட்டின் பழைய மொழியினுள்ளும் இத்தகைய அரிய செய்திகளை அறிவிக்கத்தக்க பழஞ்சொற்கள் இல்லை. எந்த மொழியைப் பேசுவோரின் பழங்காலக் கலாச்சாரங்களிலும் தமிழரிடம் இருந்தன போன்ற தோட்டக்கலையின் தொடர்பான பழக்கவழக்கங்கள் இருக்கவில்லை. எனவே, தோட்டக் கலையின் தாயகம் தமிழ்நாடே என்பது உறுதி. அக்கலை, வரலாற்றுக்கு எட்டாத காலத்திலேயே தமிழரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவிவிட்டது. இப்பரவலுக்குக் காரணம் தமிழ் வணிகர் கடல் கடந்து தொலைவு நாடுகளுக்குச் சென்று வந்ததே. ச.கு.கணபதி: குமரிக் கண்டத் தமிழர்: பக்கம்.75

ஆரியர் நெடும்படை வென்றதிந் நாடு! – வாணிதாசன்

என்னுயிர் நாடு என்தமிழ் நாடு என்றவு டன்தோள் உயர்ந்திடும் பாடு! அன்னையும் அன்னையும் அன்னையும் வாழ்ந்த அழகிய நாடு! அறத்தமிழ் நாடு! தன்னிக ரில்லாக் காவிரி நாடு! தமிழ்மறை கண்ட தனித்தமிழ் நாடு! முன்னவர் ஆய்ந்த கலைசெறி நாடு! மூத்து விளியா மறவரின் நாடு! ஆர்கடல் முத்தும் அகிலும் நெல்லும் அலைகடல் தாண்டி வழங்கிய நாடு! வார்குழல் மாதர் கற்பணி பூண்டு வாழைப் பழமொழி பயி்னறதிந் நாடு! ஓர்குழுவாக வேற்றுமை அற்றிங்(கு) ஒன்றிநம் மக்கள் வாழ்ந்ததிந் நாடு! கார்முகில் தவழும் கவின்மிகு நாடு! கடும்புலிப்…

இந்திய வரலாற்றில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது – கே.கே.பிள்ளை

  தமிழ்ச் சமுதாயம் மிகவும் பழமையான ஒன்றாகும். பண்டைய எகிப்து, பாபிலோனியா, கிரீசு, உரோம் ஆகிய நாடுகள் நாகரீகத்தில் மிகவும் சிறந்து விளங்கிய பண்டைக்காலத்திலேயே தமக்கென ஒரு நாகரிகத்தையும் சிறந்த பண்பாட்டையும் வளர்த்து வாழ்ந்து வந்தவர்கள் தமிழர்கள். இந்திய நாட்டு வரலாற்றில் இதுவரையில் தமிழகத்துக்குச் சிறப்பிடம் அளிக்கப்படவில்லை. தமிழ்நாடு என்று ஒரு நாடு இருப்பதாகவே வரலாற்று ஆசிரியர்கள் கருதியதில்லை. சென்ற நூற்றாண்டில் ஆர்.(ஞ்)சி.பந்தர்க்கார் என்பார் இந்திய வரலாறு ஒன்று எழுதி வெளியிட்டார். அதில் அவர் தமிழ்நாட்டைப் பற்றியே குறிப்பிடவில்லை.   இக்குறைப்பாட்டை வின்செண்டு சுமித்…

தமிழ்நாடு ஒருமையுடன் உழைத்தால் பெருமையடையும்! – இரா.பி.சேதுப்பிள்ளை

விழுமிய வீரம் “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்றார் திருவள்ளுவர். அவ்வுரையின் வழிநின்று வீரப்புகழ் பெற்றது பழந் தமிழ்நாடு. பாரில் உயர்ந்த பனிவரை மேல் நின்றது பழந்தமிழர் வீரம். கங்கை நாட்டில் கதித்தெழுந்த பகைவரை அறுத்தது தமிழர் வீரம். கடல் கடந்து மாற்றாரைக் கலக்கியது தமிழர் வீரம். இது சென்ற காலத்தின் சிறப்பு. மறவர் நிலை அன்று நாற்றிசையும் போற்ற ஏற்றமுற்று வாழ்ந்த தமிழ்நாடு இன்று ஊக்கம் இழந்து உறங்குகின்றது. மன்னரும் மதிக்க வாழ்ந்த மறக்குலம் இடைக்காலத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டது. அக்குல வீரரது முறுக்கு மீசை…

கல்வி கேள்வியில் வல்லவர்களை மதித்த பழந்தமிழகம் – முனைவர் ப.கிருட்டிணன்

கல்வி கேள்வியில் வல்லவர்களை மதித்த பழந்தமிழகம் கல்வியாளர்கள் ‘நல்லிசைப் புலவர்’      ( தொல்.பொருள் 313.14) ‘புலன் நன்குணர்ந்த புலமையோர்’   (தொல்.பொருள் 12:3) ‘வாய்மொழிப் புலவர்’  (தொல்.பொருள்.387:2) ‘நூல் நவில் புலவர்’   (தொல்.பொருள்.467:2) ‘உயர்மொழிப் புலவர்’  (தொல்.பொருள்.482:3) ‘தொன்மொழிப் புலவர்’  (தொல்.பொருள்.550:3) ‘நுணங்கு மொழிப் புலவர்’   (தொல்.பொருள்.653:5) என இனம் குலம் சுட்டாமல் பொதுப்படையாகப் பாராட்டப் பெற்றனர். மிக எளிய குலத்தில் பிறந்த பாணர்கள் கூடத் தம் கலைச் சிறப்பால், ‘முதுவாய் இரவலர்’     (சிறுபாண். 40; புறம் 48:7)…

இறையாண்மை என்றால் இதுதான் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

  இறையாண்மை என்னும் சொல்லிற்குக் காலந்தோறும் மாறுபட்ட பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பில் செலுத்தும் வகையில் அதிகாரம் முற்றிலும் உறைதல் (தங்குதல்) என்னும் அடிப்படைப் பொருளில் மாற்றம் மிகுதியாக இல்லை. இறையாண்மை என்பது அண்மையில் பெரிதும் பேசப்பட்டு வருவதால் நாம் இதனை அறிந்து கொள்ள வேண்டியது உள்ளது. தமிழர்க்கு இறையாண்மை மிக்க அமைப்பு தேவையா? அவ்வாறு பேசுவது சரியா? தவறா? தமிழக இறையாண்மை என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானதா? என்பனவெல்லாம் நாம் அறிய வேண்டுவன ஆகும்.புவிப்பரப்பில் சட்டங்களையும் விதிகளையும்  ஆக்கவும்…