தேவகோட்டை, மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியில்ஊர்தி

தேவகோட்டை – தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல்  ஊர்தி மூலம் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.    நிகழ்விற்கு வந்தவர்களை ஆசிரியை கலாவல்லி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.   அகத்தியா அறக்கட்டளையும் அமுமு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் அறிவியல் ஊர்தி யில் துணைக்கருவிகளைக் கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி  ஆய்வு மூலம் சென்னையைச் சார்ந்த பயிற்சியாளர் கவியரசு செய்து காண்பித்தார். வளிமண்டலக் காற்று, காற்றின் அழுத்தம், காற்றின்…

தேவகோட்டையில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன. பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகளைப் பள்ளித் தலைமை ஆசிரியர்  இலெ. சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார்.   நடுநிலைப் பள்ளி அளவில் இரண்டு பிரிவில் போட்டிகள் நடைபெற்றன. இதனில் 11  அகவைக்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்கள் பிரிவில் 6 ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர் கார்த்திகேயன்  முதலிடத்தையும், அதே  வகுப்பு மாணவர் சஞ்சீவு  இரண்டாம் இடத்தையும் , பெண்கள் பிரிவில் 6  ஆம்…

கற்றல் குறைபாட்டை (Dyslexia-வை) வென்ற தன்னம்பிக்கையின் சிகரம்!

கற்றல் குறைபாட்டை (Dyslexia-வை) வென்ற தன்னம்பிக்கையின் சிகரம்! அறுபதாயிரம் அலுவலர்களை மேலாளும்(நிருவகிக்கும்), கற்றலை இடை நிறுத்திய முன்னாள் மாணவர்! முந்நூறாயிரத்து ஐந்நூறு(மூன்றரை இலட்சம்) மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நம்பிக்கையூட்டும் கற்றல் குறைபாடுடைய மாணவர்! வராததை வரவழைத்த வெற்றி மனிதர்! கனவை நனவாக்க… வாழ்க்கையில் வெற்றி பெற… ஆவல் இருக்க வேண்டும்! அதற்கான செயலும் இருக்க வேண்டும்! உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில் உங்கள் வெற்றி இருக்க வேண்டும்! நம் வாழ்க்கையே ஊதுபை (பலூன்) மாதிரிதான்! – இந்திய வருமான வரி இணை ஆணையாளர் பேச்சு  …

மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு!

மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு!   தேவகோட்டை- தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சன்மார்க்கச் சங்கம் நடத்திய போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுதல் நிகழ்ச்சி   நடைபெற்றது.   நிகழ்வில் மாணவர் விசய் வரவேற்றார். தலைமை ஆசிரியர்  இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.  தேவகோட்டை சன்மார்க்கச் சங்கம் நடத்திய போட்டிகளில் பங்கேற்று  பரிசுகளும், சான்றிதழ்களும் பெற்ற மாணவிகள் காயத்திரி, உமாமகேசுவரி, தனலெட்சுமி ஆகியோருக்கும், அழைத்துச் சென்ற ஆசிரியை கலாவல்லிக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவி சந்தியா நன்றி கூறினார்….

பெண்கள் உடல்நலம் பேணுவது எப்படி?

பெண்கள் உடல்நலம் பேணுவது எப்படி? பள்ளி மாணவிகளுக்கு மருத்துவர் வழி காட்டுதல் தேவகோட்டை- தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்க  வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான மருத்துவ  அறிவுரைக் கலந்துரையாடல் நிகழ்ச்சி  ஆ.கா.க.(எல்.ஐ.சி.)க் கிளை சார்பாக நடைபெற்றது. இப்பள்ளியில் மாணவிகளுக்கு  தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த விழிப்புணர்வு மருத்துவ  அறிவுரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.  வழிகாட்டுதல் முகாமிற்கு வந்தவர்களை ஆசிரியை சாந்தி வரவேற்றார். தேவகோட்டை  ஆ.கா.க. கிளையின் மேலாளர் மோகனசுந்தரம் தலைமை தாங்கிப் பேசினார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் முன்னிலை…

திகைக்கச் செய்யும் திருக்குறள் திலீபன் : நினைவாற்றல் பயிலரங்கம்

திகைக்கச் செய்யும் திருக்குறள் திலீபன்:   நினைவாற்றல் பயிலரங்கம் தேவகோட்டை: தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் திருக்குறள் தீலீபனின் நினைவாற்றல் பயிலரங்கம் நடைபெற்றது.     இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியர் சிரீதர் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர்  இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். காரைக்குடி தங்கசாமி,    நடராசபுரம் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.    திருக்குறள் தீலீபன் மாணவர்களின் முன்பு “புராணக்கால வரலாற்றிலிருந்து காணப்படும் பலவகைக் கலைகளுள் நினைவாற்றலை மனத்தில் நிறுத்தி அதைக் கவனத்தில் கொண்டு, மீண்டும் நினைவுபடுத்திக் கூறும்…

மா ஓகையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா

மா ஓகையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா    தேவகோட்டை: தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேவகோட்டையில் கந்தசட்டிக் கழகம் சார்பாக நடைபெற்ற மா ஓகையில்(யோகா) கலந்துகொண்டதற்குப் பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.    விழாவில் ஆசிரியை சாந்தி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். கந்தர்சட்டிக் கழகம் சார்பாக நடைபெற்ற மா ஓகையில்  கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் கழகத்தின் சார்பாகச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளியில் இருந்து…

தினமலர் பட்டம் சான்றிதழ் வழங்கும் விழா

தினமலர் பட்டம் சான்றிதழ் வழங்கும் விழா    பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் மாணவி பரமேசுவரி, தினமலர் பட்டம் சார்பாக நடைபெற்ற பட்ட அவை(சபை) நிகழ்வுக்குத் தேர்வு பெற்று  சென்னையில் (வைகாசி 23, 2047 / சூன் 05,2016 அன்று) நடைபெற்ற பட்டஅவை(சபை) நிகழ்வில் கலந்துகொண்டு சான்றிதழ், புத்தகங்களைப்   பரிசாகப் பெற்றார். திரு.நல்லகண்ணு, திரு.இரவிக்குமார், தினமலர் துணை ஆசிரியர் திரு.கிருட்டிணமூர்த்தி  ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.    மறுநாள் (வைகாசி 24, 2047 / சூன் 06, 2016 அன்று) பள்ளியில்…

மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பிற பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி

முதலாம் ஆண்டு ஓவியப் போட்டி    தேவகோட்டை: – தேவகோட்டை   பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பிற  பள்ளி மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு ஓவியப் போட்டி நடைபெற்றது.   போட்டிக்கு வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். இளமழலை மாணவர்களுக்குத் தனியாகவும், 1முதல் 3ஆ ம்வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முதல்  பிரிவாகவும், 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம்  பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றன.   பள்ளித் தலைமை ஆசிரியர்  இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். இப்போட்டிகளில் தேவகோட்டையில் உள்ள பல்வேறு அரசு,…

மாணிக்கவாசகம் மாணவி பரமேசுவரி தினமலர் பட்ட அவைக்குத்தேர்வு

தினமலர் பட்டம் –  பட்ட அவை உறுப்பினராகத் தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி பரமேசுவரி தேர்வு “அரசும் ,அரசியல் கட்சிகளும் மாணவர்களுக்கு உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன ?”  என  எழுதி அனுப்புங்கள் என்று தினமலர் பட்டம் இதழில் சில நாட்களுக்கு முன்பு மாணவர்களிடம் கேட்டு இருந்தனர். அதன் தொடர்ச்சியாக இப் பள்ளியில் இருந்து பல்வேறு மாணவர்களை ஊக்கப்படுத்தி இப்போட்டியில் கலந்து கொள்ளச் சொன்னோம். அதனில் சிவகங்கை மாவட்ட அளவில் அரசு,அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி…

தேவகோட்டையில் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு

ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு! தனியார்/ பன்னாட்டுப் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு வெற்றி தேவகோட்டை :- தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தனியார்-பன்னாட்டுப் பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றுச் சார் ஆட்சியரிடம் பரிசு பெற்றதற்குப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தோரை மாணவர் (இ)யோகேசுவரன்  வரவேற்றார். பள்ளித்தலைமை ஆசிரியர்  இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். காரைக்குடியில் உள்ள தனியார் -பன்னாட்டுப் பள்ளியில் நடைபெற்ற அனைவருக்குமான ஓவியப்போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் திவ்யசிரீ,…

மத்திய அரசின் சான்றிதழ் வழங்கும் விழா

மத்திய அரசின்  சான்றிதழ் வழங்கும் விழா தேவகோட்டை தேவகோட்டைபெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அனைருக்கும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. விழாவில் 8 ஆம் வகுப்பு மாணவர் சௌமியா  வரவேற்புரை வழங்கினார். தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் விழாவிற்குத் தலைமை தங்கினார்.   மாநில அளவில் தேசிய ஆற்றல் துறை சார்பாகத் “தேசிய எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு” என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில்…