திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 006. வாழ்க்கைத் துணை நலம்

(அதிகாரம் 005. இல்வாழ்க்கை தொடர்ச்சி) 001 அறத்துப் பால்            002 இல்லற இயல் அதிகாரம்     006. வாழ்க்கைத் துணை நலம்        கணவர், மனைவியரது நல்பண்புகளும், இணைஇலாப் பெண்ணின் பெருமைகளும்.     மனைத்தக்க மாண்(பு)உடையள் ஆகித்,தன் கொண்டான்    வளத்தக்காள், வாழ்க்கைத் துணை.          மனைஅறத்தாள், கணவற்கு வளம்தரு        தகுதியள்; நலம்சார் துணை.   மனைமாட்சி இல்லாள்கண் இல்ஆயின், வாழ்க்கை,      எனைமாட்சித்(து) ஆயினும் இல்.          இல்லப்பண்பு இல்லாளிடம் இல்எனின்,        மற்ற சிறப்புகளால்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 005. இல்வாழ்க்கை

(அதிகாரம் 004. அறன் வலியுறுத்தல் தொடர்ச்சி 001 அறத்துப் பால் 02  இல்லற இயல்       அதிகாரம்  005. இல்வாழ்க்கை      குடும்ப வாழ்க்கையின் கடமைகளும்,        அரும்பெரும் பொறுப்புக்களும், சிறப்புக்களும்.   இல்வாழ்வான் என்பான், இயல்(பு)உடைய மூவர்க்கும்,      நல்ஆற்றின் நின்ற துணை.          பெற்றார், மனைவி, மக்களுக்கு,        இல்வாழ்வான் நவவழித் துணைவன்.   துறந்தார்க்கும், துவ்வா தவர்க்கும், இறந்தார்க்கும்,      இல்வாழ்வான் என்பான் துணை.          துறவியார், வறியார், ஆதரவிலார்க்கு,        இல்வாழ்வான்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 004. அறன் வலியுறுத்தல்

(அதிகாரம்   003. நீத்தார் பெருமை தொடர்ச்சி)          001 அறத்துப் பால்        01 பாயிர இயல் அதிகாரம் 004. அறன் வலியுறுத்தல்                     ‘சிந்தனையும், சொல்லும், செயலும்          தூயதாய் இருக்க’ என வற்புறுத்தல்   சிறப்(பு)ஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்ஊங்(கு)      ஆக்கம் எவனோ உயிர்க்கு…..?         சிறப்பும், செல்வமும் தருஅறத்தைவிட,         வளமும் நலமும் வே[று]இல்லை.   அறத்தின்ஊங்(கு), ஆக்கமும் இல்லை; அதனை,       மறத்தலின் ஊங்(கு)இல்லை கேடு.        அறத்தைவிட, நல்லதும், அதனை         மறத்தலைவிடக், கெட்டதும்,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 003. நீத்தார் பெருமை

(002. வான்சிறப்பு தொடர்ச்சி) 001 அறத்துப் பால்        01 பாயிர இயல்          அதிகாரம்   003. நீத்தார் பெருமை              துறவியரது, சான்றோரது ஆற்றல்கள்,          அறவியல் பண்புகள், பெருமைகள். ஒழுக்கத்து நீத்தார் பெருமை, விழுப்பத்து வேண்டும், பனுவல் துணிவு.    ஒழுக்கநெறி நின்று, துறந்தார்தம்        பெருமையை நூல்கள் போற்றட்டும். துறந்தார் பெருமை துணைக்கூறின், வையத்(து), இறந்தாரை எண்ணிக்கொண்(டு) அற்று.      துறந்தார் பெருமையை, உலகில்        இறந்தாரை எண்ண இயலாது. இருமை வகைதெரிந்(து), ஈண்(டு)அ)றம் பூண்டார் பெருமை, பிறங்கிற்(று) உலகு.      நல்லன,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 002 வான்சிறப்பு

(001. இறைமை வழிபாடு தொடர்ச்சி) 001 அறத்துப் பால்        01 பாயிர இயல் 002. வான்சிறப்பு உலகையே வாழ்விக்கும் அமிழ்தமாம்      மழையின், பயன்களும் சிறப்புக்களும். வான்நின்(று), உலகம் வழங்கி வருதலான், தான்அமிழ்தம் என்(று),உணரல் பாற்று.      உலகையே நிலைக்கச் செய்வதால்,        மழைநீர்தான், அமிழ்தம்; உணர்க. துப்பார்க்குத், துப்(பு)ஆய, துப்(பு)ஆக்கித், துப்பார்க்குத், துப்(பு)ஆய தூஉம், மழை.   உண்பார்க்கு உணவை ஆக்குவதும்,          உணவாக ஆவதும் மழைதான். விண்நின்று பொய்ப்பின், விரிநீர் வியன்உலகத்(து), உள்நின்(று) உடற்றும் பசி.    மழைப்பொய்ப்பு நிலைத்தால், உலகத்து…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 001. இறைமை வழிபாடு

  01. அறத்துப் பால் 001. அதிகாரம்            01.  பாயிர இயல்           001. இறைமை வழிபாடு  மக்கள் கடைப்பிடிக்கத் தக்க இறைமை ஆகிய நிறைபண்புகள்.   அகர முதல, எழுத்(து)எல்லாம்; ஆதி பகவன், முற்றே உலகு.        எழுத்துக்களுக்கு, அகரம் முதல்;        உலகினுக்கு, இறைவன் முதல்.     கற்றதனால் ஆய பயன்என்கொல்…? வால்அறிவன் நல்தாள், தொழாஅர் எனின்.   தூய அறிவன்வழியைப் பின்பற்றாத  சீரிய கல்வியால், பயன்என்….?   மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார், நிலமிசை நீடுவாழ் வார்.   மலரைவிட,…