கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 45 : நாவலர் ஆறுதல் உரை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 44 : திருக்குறள் கற்றுத் தெளிந்த காதை – தொடர்ச்சி) பூங்கொடி நாவலர் ஆறுதல் உரை எறிபெருங் கல்லால் இடர்பெரி துற்றேன்,எனினும் பின்னர் என்னுரை விழைவோர் 25நனிபெரு கினரால் நயந்திவண் இருந்தேன்’ நாவலர் ஆறுதல் உரை `அன்னாய்! உலகில் அறிவொளி பரப்பமுன்னுவோர்க் கெல்லாம் முதல்வர விதுவே;தொல்லைகள் பொறுத்துத் தொண்டுகள் ஆற்றின் 30எல்லையில் இன்பம்; எடுத்தது முடியும்;வெற்றி வெற்றி விளைவது கண்டோம்;உற்றநின் துயரால் உளமது கலங்கேல்ஆற்றுக தொண்டே ஆற்றுக தொண்டே; நாவலர் தலைமேற் கல் கல்லார் நல்வழி நில்லார் புல்லார்,குழப்பம்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 44 : திருக்குறள் கற்றுத் தெளிந்த காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 43 : பூங்கொடி தெளிதல்) பூங்கொடி நாவலர் வருகை அந்நகர் மக்கள் அறியா மையிருள்வெந்நிட அறிவொளி விரித்தெழு செஞ்சுடர்ப்பரிதி என்னப் பாவை விளங்க,உரிமை வேட்கையும், உன்னும் பண்பும்,உன்னிய தஞ்சா துரைக்கும் உரனும், 5முன்னூ லாகிய முத்தமிழ் வகைக்கும்விரித்துறை திறனும், வியனுறு குறள்நூல்உலகெலாம் பரவ உழைக்கும் செயலும்,உடையார் அறிவுப் படையார் ஒருவர்நடையால் உயர்ந்த நாவலர் அந்நகர் 10வருமவர் பூங்கொடி வந்துள தறிந்துபெரும்பே ராசான் அருங்குண அறிஞர்திருமா மகளைத் தேடி வந்தனர்; பூங்கொடி நிகழ்ந்தன கூறல் மன்னிய குறள்நூல் மாசறத் தெறிந்தேன்;குறளகம்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 43 : பூங்கொடி தெளிதல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 42 : தாமரைக் கண்ணி நிகழ்ந்தன கூறல் -தொடர்ச்சி) பூங்கொடி பூங்கொடி தெளிதல் நல்லியற் பூங்கொடி நலங்குறைந் திருப்போள் 45சேக்கையிற் சாய்ந்து சிந்தித் திருந்தனள்;சிந்தனைத் திரையில் சென்றபன் னிகழ்ச்சிகள்வந்து மறைந்தன; தந்தையின் நினைவும்நொந்தஅவ் வுளத்தில் நுழைந்தது; ஐயகோ!மொழிக்குறும் பகைமை முதுகிடப் பொருதனை! 50இழுக்குறும் அடிமை இரிந்திட உழைத்தனை!வழுக்களைந் தினத்தவர் வாழ்ந்திட மொழிந்தனை!ஆயினும் அந்தோ அறிவிலார் கூடி,நாயினும் கீழோர் நயவஞ் சகரால்கொன்றனர் நின்னைக் கொடுமை! கொடுமை! 55என்றெழும் உணர்ச்சி நெஞ்சினைக் கொன்றிடத்துயரம் புனலாய்த் துணைவிழி வழியாஉயிரொடு வெளிவரல் ஒப்ப வழிந்தது;…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 42 : தாமரைக் கண்ணி நிகழ்ந்தன கூறல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 41 : 8. கடல்நகரில் தங்கிய காதை-தொடர்ச்சி) பூங்கொடி தாமரைக் கண்ணி நிகழ்ந்தன கூறல் தகவுரை கேட்டோர் அகமிக வுருகிஇன்னுஞ் சின்னாள் இருந்திடல் வேண்டும்என்ன நயந்தனர்; எழிற்பூங் கொடியும்ஆண்டுளார் பண்பொடு அவர்தம் அரசியல் 30காண்டகு நெஞ்சினள் கனிவோ டிசைந்தனள்;சின்னாள் இருந்து செந்தமிழ் பரப்பிப்பின்னர் மீளுவள் பேதுறல் தவிர்நீ’இன்னணம் தாமரைக் கண்ணி இசைத்தலும் அருண்மொழி மனநிலை கலங்கினள் ஆயினும் `கன்னித் தமிழின்விலங்குபடை படஅவ் வீரங் காட்டினள்;வாழ்கஎன் மகளே! வாழ்கஎன் மகளே!வாழ்கஎன் தமிழே! வாழ்கஎன் தமிழே!’ 40எனுமுரை கூறி இறுமாந் திருந்தனள்மனமொழி…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 41 : 8. கடல்நகரில் தங்கிய காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 40 : சொற்போர் புரிக-தொடர்ச்சி) அத்தியாயம் 8. கடல்நகரில் தங்கிய காதைநகரத்தார் வேண்டுதல் தாமரைக் கண்ணி தன்னொடு வந்ததோமறு பூங்கொடி தூயநல் லுரையால்திருந்திய மனத்தினர் திரள்கொடு வந்தே,`இருந்திடல் வேண்டும் இன்னும் சின்னாள்நின்னுரை கேட்டோர் நேரிய ராகிப் 5புன்முறை நீங்கிப் புந்தி தெளிந்துமல்கிருள் அகல மதியொளி பெற்றுநல்லுணர் வெய்தி நலம்பெறல் திண்ணம்ஆதலின் நங்காய்! அருளுதி, நின்னகர்ப்போதல் ஒழிமதி!’ எனுமுரை புகன்றனா 10 அக்கொடி தன்னுளம் அறிந்தவ ளாதலின்தோமறு பணிசெயத் தூயவ ளாகியதாமரைக் கண்ணி தந்தனள் இசைவே;ஆண்டிருந் தேகி அணிமலர்க் கண்ணி…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 40 : சொற்போர் புரிக

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 39 : சிறியர் செய்கை- தொடர்ச்சி) பூங்கொடிசொற்போர் புரிக பிழைஎனப் படுமேல் பேசுக அரங்கில்கழைஇனி தென்றேன் கசக்குமென் பீரேல்சான்றுடன் நிறுவுக, சால்பது வாகும்; 120நான்தரு கருத்தினை மறுத்துறை நவிலுதல்அறிவோர் கொள்கை; அதனை விடுத்துச்சிறியோர் செயல்செய முனைதல் நன்றோ?திறமிலார் செயலெதும் திருந்திய கொள்கைஉரமுளார் போக்கினை ஒதுக்குதல் இல்லை; 125 பூங்கொடி துணிபு சாதல் உறுதி, சதைபடு இவ்வுடல் 135கழுகு பருந்துகட் குணவாய்க் காட்டில்அழுகிக் கிடக்கும், அத்தகு நிலையுடல்என்னின மக்கள் எறிகல் பட்டுச்செந்நீர் சிந்திச் செந்தமிழ் காக்கமாய்தல் பெறின்நான் மனங்கொள ஏற்பேன்;…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 39 : சிறியர் செய்கை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 38 : அரங்கின் தோற்றம்- தொடர்ச்சி) பூங்கொடிசிறியர் செய்கை றற்பச் செயலென அறியார்; அறிஞர்நெஞ்சிற் பதிந்த கருத்துரை நிலமிசைவிஞ்சிப் படர்வதை விரும்பாச் சிறியர் 95புன்மைச் செயல்செயப் புறப்படல் படரிருள்புன்மைக் கணத்தைப் புறங்காட் டச்செயும்கதிரோன் தன்னைக் கையால் மறைக்கும்மதியோர் செயலினை மானும்; அந்தோ! பூங்கொடியின் கனன்றுரை நுவன்றனள் ஒருகல் நுதற்படச் செந்நீர்சிந்திச் சிவந்தன மேடையும் ஆடையும்;கனன்றனள் சொல்லினைக் கனலெனச் சிந்தினள்;பெண்மையில் ஆண்மை பிறத்தலுங் கூடும் 105உண்மை உணர்த்தினள் ஊரினர்க் கவ்விடை;`சான்றீர் பெரியீர் சாற்றுவென் கேண்மின்!ஆன்ற பெரும்புகழ்த் தமிழின் அருமைகேடுறல் நன்றோ?…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 36 : கோமகன் மறுமொழி

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 35 : 7. கடல்நகர் புக்க காதை –  தொடர்ச்சி) பூங்கொடி கோமகன் மறுமொழி வேம்பென வெறுப்பவள், வியனுல கதனில் மேம்படு தமிழே மேவிய மூச்சாய் வாழும் குறிக்கோள் வாழ்வினள்; அம்மகள் சூழும் தொழிற்குத் துணைசெயல் இன்றி             ஊறுகள் இயற்றல் ஒவ்வுமோ?’ என்றனள்; 25 கோமகன் மறுமொழி           `ஊறுகள் இயற்ற ஒருப்படேன் தாயே! துணைசெய நினைந்தே தோகை அவட்குத் துணைவன் ஆகத் துணிந்தேன்’ எனலும்,     மீண்டும் இடித்துரை           `செல்வ! நன்றுரை செப்பினை! அறிவைக்           …

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 35 : 7. கடல்நகர் புக்க காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 34 : முத்தக் கூத்தன் கொலை – தொடர்ச்சி பூங்கொடி 7. கடல்நகர் புக்க காதை கோமகன் துயிலாமை           மலர்மலி காவுள் மங்கை பூங்கொடியின் அலர்விழி அருளும் அந்தீங் கிளவியும் பெறாஅது கோமகன் பெயர்ந்தோன் அக்கொடி மறாஅது தன்னை மணங்கொள வழிவகை           உன்னி உன்னி உறங்கா திருந்தனன்; கன்னியர் நினைவுறின் கண்படை ஒல்லுமோ?     5 கதிரவன் எழுச்சி           இருளின் கால்சீய்த் தெழுந்தனன் பரிதி; மருள்கெட மக்கள் இமைகள் மலர்ந்தனர்; தெருள்நிலை கண்டனர்; தேய்ந்த உணர்வெலாம்          …

கவிஞர் முடியரசனின் பூங்கொடி 34 : முத்தக் கூத்தன் கொலை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 33 : தொடர்ச்சி) பூங்கொடி அயரினும் இவ்வுணா அருந்தேன் என்றனன்;அடித்தனர் அவனை அருங்கேன் என்றனன்;அடித்தனர் அவனை அஞ்சேன் என்றனன்;அடித்தனர் அடித்தனர் அடித்தே கொன்றனர்! அந்தோ அந்தோ ஆவி துறந்தனன்; 140 நொந்த அப்பிணத்தை மூடிய கல்லறைசுடுகாட் டாங்கண் தோன்றும்; அதுதான்உடுவான் நிலவால் ஒளிபெற் றிலங்கும்,சித்தம் கலங்கேல், அதன்முன் செல்லின் முத்தக் கூத்தன் முழுவலி வாய்க்கும்’ என் 145றுரைத்ததன் பின்னர் ஒள்ளிழை மேலும் ‘இசை, துறை வல்லாய் இரைகடல் நாப்பண்கடல்நகர் என்னும் ஒருநகர் உளதவண்மடமையில் மூழ்கிய மக்கள் மலிந்துளார்;அப்பெரும் மடமை அகற்றுதல்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி 33 : குருதி சிந்தினர்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 32 : பிறமொழி புகுதல் -தொடர்ச்சி) பூங்கொடி குருதி சிந்தினர் தொடும்பணி எதையும் துணிவுடன் ஆற்றக்கடும்புயல் என்னக் கனன்றெழும் காளையர்கொடியுடைக் கையர் கூடி எழுந்தனர்;தடியடி தாங்கினர் தரையிற் செந்நீர்சிந்தினர் மொழிப்பயிர் செழிப்பான் வேண்டி, 115குருதி கண்டும் உறுதி குலைந்திலர்முறுகி எழுந்தனர்; மூண்டெழும் மக்கள்உணர்ச்சியும் அதனோ டுள்ளெழும் எண்ணமும்பணத்திமிர்க் கடங்கும் பான்மைய அலவே! கிளர்ந்தெழு வீரரைக் கொடுஞ்சிறைக் கிடத்தின் 120தளர்ந்திறும் புரட்சிஎன் றுளந்தனிற் கொண்டோர்சிறையகந் தொறுமிடம் இலாமல் அடைத்தனர்;சிறையகம் வீரர்தம் சிந்தையை அழிக்குமோ?குறைமதி யாளர்தம் கொள்கை அஃதாம்; சிறையகம் போலச் சிந்தனை…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி 32 : பிறமொழி புகுதல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 31 : முத்தக் கூத்தன் கல்லறை-தொடர்ச்சி) பூங்கொடி பிறமொழி புகுதல் நம்நாட் டகத்தே ஈயமிலாப் புன்மொழிதிணிப்பதற் கொருசிலர் செய்தனர் சூழ்ச்சி;துணுக்குற் றெழுந்தனர் தூயநல் மனமுளோர்;தாய்மொழி வளர்ச்சி தளர்ந்த இந் நாட்டில்நோய்என மடமை நுழைந்து பரந்தது; 85எழுத்தும் அறியார் படிப்பும் உணரார்கழுத்திற் பிறமொழி கட்டுதல் நன்றாே?என்றநல் லுரையை இகழ்ந்தனர் ஆள்வோர்;நெஞ்சங் கனன்றதுகன்றிய நெஞ்சங் கனன்றது; தமிழர்பொறுக்கும் அளவே பொறுப்பர், மீறின் 90ஒறுத்ததன் பிறகே ஓய்வும் உணவும்நினைவர் இதுதான் நெடுநாள் இயல்பு;கனலும் புனலும் கரைமிகின் தடுக்கஉலகில் ஒருபொருள் உளதென அறியோம்; மூக்கினை வருடின்…

1 2 4