மொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே! – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்

மொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே!   மொழிப்பாடங்கள் சுமையாக இருப்பதாகக் கூறி அரசு, தாள் 1, தாள் 2 என இருந்த முறையை மாற்றியுள்ளது. இனி  மொழிப்பாடங்களில் ஒரு தேர்வுத்தாள் மட்டுமே இருக்கும்.  மேம்போக்காகப் பார்க்க இது சிறப்பானதாகத் தோன்றலாம். ஆனால்,  மொழி அறிவு என்பது அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை. அறிவியல் முதலான பிற மொழிப்பாடங்களைப் படிப்பதற்கும் மொழி அறிவு துணை நிற்கின்றது. அறிவில் சிறக்கத் துணையாய் இருக்கும் தாய்மொழி அறிவு குறைக்கப்படுவது மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்….

சமற்கிருதத் திணிப்பா? தாங்காது இந்தியா! – ஆ. இரா.அமைதி ஆனந்தம்

சமற்கிருதத் திணிப்பா? தாங்காது இந்தியா! முன் ஒரு காலத்தில், (1) இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பழந்தமிழ் வழங்கி வந்தது என்பதும், (2) ஆரியர் வந்த பிறகு, சமற்கிருதத் திணிப்பால் படிப் படியாய் தமிழ் பல மொழிகளாக பிளவுபட்டது என்பதும் (3) அம்மொழிகளே இப்போதய இந்திய மொழிகளாய் உள்ளன  என்பதும் (4) இதற்கு மூல காரணமாய் இருந்த சமற்கிருதம் வழக்கில் இல்லை என்பதும் (5) மக்கள் மொழியாக சமற்கிருதம் எப்போதுமே இல்லை என்பதும் பழந்தமிழ் நாட்டின்/ திராவிட நாட்டின் / இந்திய நாட்டின் /தமிழ் நாட்டின் வரலாறு….

கல்வெட்டிலேயே தொடங்கிய சமற்கிருதத் திணிப்பு – தமிழ நம்பி

  கல்வெட்டிலேயே தொடங்கியசமற்கிருதத் திணிப்பு!    கழக(சங்க)க் காலத்தில் தமிழ்நாட்டில் அரசர், போர்மறவர் முதலிய செல்வர் மனைகளில் மகன் பிறந்தால் அவனை முதன்முதலாகத் தந்தை சென்று காண்பது ஒரு சிறப்பு நிகழ்ச்சி! அதனைத் “தவமகன் முகம் காண்டல்” என்பர். தகடூரை ஆண்ட அதியமானுக்கு மகன் பிறந்த போது நடந்த இச்சிறப்பை ஒளவையார் புறநானூற்றுப் பாடல் ஒன்றில் (புறம்.100) கூறுவதை அறியலாம்.   இந்த வழக்கம் கி.பி.14ஆம் நூற்றாண்டிலும் இருந்தது என்பதைத் திருமயம் பகுதியிலுள்ள நெக்கோணம் பெருமாள் கோயில் கல்வெட்டு (பி.எசு.672) தெரிவிக்கிறது. இங்கிருந்து நாடுகாவல்…