அகல் விளக்கு – மு.வரதராசனார்: 38
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 37. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 15 தொடர்ச்சி ஒருநாள் விட்டுவருவதை விட மூடிவருவதே நல்லது. “நான் வேண்டாங்க. என் மனைவியை அழைத்துச் செல்லுங்கள். என் பையனை அழைத்துச் செல்லுங்கள். என் குடும்பத்திலிருந்து இரண்டு பேர் வந்தால் போதாதா?” என்று சொல்லிவிட்டார். அதனால் நானும் அம்மாவும் மட்டும் போய் வந்தோம். அது சின்ன ஊர். உழவுத் தொழில் செய்பவர்கள் நல்ல குடும்பத்தார் பலர் வாழ்ந்த ஊர் அது. எல்லாரும் எளிய ஏழைக் குடும்பத்தாரே. ஒருநாள் இரவு தங்கி உறுதி…
ஈழத்துப் புதின இலக்கியம் – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 8 அத்தியாயம் 4. புதினம் பத்தொம்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையிலும் இந்தியாவிலும் நிலவுடைமைச் சமூக அமைப்பில் ஏற்ப்பட்ட சீர்குலைவும், முதலாளித்துவ சமூக அமைப்பின் தோற்றம், பிரித்தானியர் அறிமுகப்படுத்திய ஆங்கிலக் கல்வி, மேலைநாட்டு இலக்கியப் பரிச்சயம் முதலியவையும் தமிழ் இலக்கியப் போக்கில் பாரிய மாற்றங்கள் ஏற்படக் காரணிகளாயின. புதினம்(நாவல்), சிறுகதை முதலிய நவீன இலக்கிய வடிவங்களின் தோற்றம் இவற்றுளொன்றாகும். பத்தொன்பதால் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோற்றம் பெற்ற புதின இலக்கியம் இன்று பல்வேறு வளர்ச்சிப் போக்குகளையும்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 13
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 12. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 5 சோதியென்னும் கரையற்ற வெள்ளம்தோன்றி எங்கும் திரைகொண்டு பாய,சோதியென்னும் நிறைவு இஃதுலகைச்சூழ்ந்து நிற்ப ஒருதனி நெஞ்சம்சோதியென்றதோர் சிற்றிருள் சேரக்குமைந்து சோரும் கொடுமையிதென்னே! — பாரதி மயக்கம் தெளிந்து கண் விழித்தபோது ஒருகணம் தான் எங்கே இருக்கிறோமென்றே பூரணிக்கு விளங்கவில்லை. ஏதோ ஒரு பெரிய வீட்டில், புதிய சூழ்நிலையில் காற்றைக் சுழற்றும் மின்விசிறிக்குக் கீழே கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தாள். பரக்கப் பரக்க விழித்தவாறே தன்னைச் சுற்றிலும் பார்த்தாள். அப்படி அவள் ஒன்றும் புரியாமல் விழித்துப் பார்த்தபோது தான் சற்றுத்…
தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 15/17
(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 14/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி: 15/17 இனித்தநறுந் தமிழ்மக்கள் இயன்றவரை தமக்குரியதனித்தமிழில் எழுதுவதே தகுதியுடைத் தம்மானைதனித்தமிழில் எழுதுவதே தகுதியுடைத் தாமாயின்தனித்தமிழ்ச் சொற்கள் சில தமிழிலில்லை யம்மானைஇல்லையென் றாற்புதிதாய் இயற்றவேண்டும் அம்மானை (71) பழித்தற் கிடமின்றித் தமிழ்நாட்டுப் பண்புகளைஎழுத்தாளர் தமிழ்நடையில் எழுதவேண்டும் அம்மானைஎழுத்தாளர் தமிழ்நடையில் எழுதவில்லை எனினினிமேல்விழித்த தமிழ்மக்கள் விடுவரோ அம்மானைவிடமாட்டார் அன்னவரை வெறுத்திடுவார் அம்மானை (72) வீசும் புகழொளிசால் வியன்தமிழர் எஞ்ஞான்றும்பேசும் போதாங்கிலத்தில் பேசுவதோ அம்மானைபேசும்போதாங்கிலத்தில் பேசவேண்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 37
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 36. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 15 விடுதிக்குத் திரும்பிச் சென்றபோது, மாலன் மறுநாள் காலைப் பயணத்துக்காகப் புத்தகங்களைப் பெட்டியில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான். என்னைக் கண்டவுடன், “நான் தேறிவிடுவேன்” என்று மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னான். நான் பாராட்டுத் தெரிவித்து விட்டு, “செய்தி எப்படித் தெரிந்தது? இதற்குள் தெரிவதற்கு வழி இல்லயே. ஆசிரியர் சொன்னாரா?” என்றேன். “சோதிடம் கேட்டேன்” என்றான். “சோதிடக்காரனுக்கு நீ எழுதியது எப்படித் தெரிந்தது!” என்று சிரித்தேன். “குருதசை நன்றாக இருக்கிறது வக்கிரம் இல்லாமல்” என்றான். என்…
ஈழத்துக் கவிதை முயற்சிகள், இதழ்கள், நூல்கள் -சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 7 அத்தியாயம் 3. கவிதை தொடர்ச்சி 2 இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை பற்றிப் பேசுகையில் மொழிபெயர்ப்பு முயற்சிகளைத் தனியாகக் குறிப்பிடுவது பொருத்தமாகும். பல்வேறு மொழிகளில் இருந்து ஏராளமான கவிதைகள் இக்காலப் பகுதியில் இலங்கைக் கவிஞர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. கலைநோக்கில் இருந்து சமூகநோக்குவரை ஈழத்துத் தமிழ்க்கவிதை பரிணமித்ததை மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் நாம் காணலாம். 1940 ஆம் 50 ஆம் ஆண்டுகளில் குறிப்பிட்ட சமூக நோக்குபற்றிய பிரக்ஞையின்றி இலக்கியச் சுவையின் அடிப்படையில் பிறமொழிக் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டன….
தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 14/17
(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 13/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி: 14/17 தமிழ்க்கிளர்ச்சி தனைவிரும்பித் தமிழ்மறவர் சிலர்முன்புதமிழ்தமிழ்செந் தமிழென்று தவித்தார்கள் அம்மானைதமிழ்தமிழ்செந் தமிழென்று தவித்தவரைக் கொடியசிலதமிழரே தண்டித்து வெறுத்தனர் அம்மானைவெறுத்தோர் எலாம்இன்று விரும்புகின்றார் அம்மானை (66) உரிமை இனியும் தமிழர்கள் ஏமாற இயலாதால்தனியாக தமிழர்க்குத் தரவேண்டும் அம்மானைதனியாக தமிழர்க்குத் தரவேண்டின் இணைந்துள்ளஇனியநல் இந்தியத்தை எதிர்ப்பதாமே அம்மானைஎதிர்க்காது தமிழுரிமை ஈயக்கேள் அம்மானை (67) தண்ணியசெந் தமிழ்நாடு தமிழர்க்கே அம்மானைதண்ணியசெந் தமிழ்நாடு தமிழர்க்கே யாமாயின்நண்ணு…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 36
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 35. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 14 தொடர்ச்சி “முதலாம் நாள் சந்திரனைக் கண்டு பழகி வீட்டில் பேசிக் கொண்டிருந்தோமே, அன்று அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அடுத்தமுறை ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் சந்திரன் வந்து போனார் என்று சொன்னேன் அல்லவா? அன்று இரவு அம்மா என்னைத் தனியே அழைத்து அறிவுரை கூறினார். “நல்ல பிள்ளை அம்மா அதில் எனக்குச் சந்தேகம் இல்லை. இருந்தாலும் ஒத்த வயது உள்ள ஆண் பிள்ளைகளோடு பழகுவதில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்….
தந்தை பெரியாரின் சாதிக்கொள்கை : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 20 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 21 3. சாதிக்கொள்கை தமிழர் வாழ்வில் எப்படியோ புகுந்தவிட்ட ‘சாதிக்கொள்கை’ யைச் சாடுவதை ஆய்வு செய்வதற்கு முன்பு பண்டைய தமிழ் இலக்கணங்களில் இக்கொள்கைகைபற்றி வரும் குறிப்புகளை முதலில் தெரிந்து கொள்வது இன்றியமையாதது என்று கருதி அவற்றை முதலில் காட்டுவேன். களவுக்காலத்தில் தலைவன் பிரிவு வகைகளைக் கூறும் இறையனார்களவியல், ஓதல் காவல் பகைதணி வினையேவேந்தர்க் குற்றுழி பொருட்பிணிஆங்க ஆறே அவ்வுயிற் பிரிவே [குறிப்பு 2] என்ற நூற்பாவில் அப்பிரிவுகள் தொகுத்துக் கூறப்பெற்றுள்ளன. அவை: ஓதற்பிரிவு, காவல்பிரிவு, பகைதணிவினைப் பிரிவு, வேந்தர்க்குற்றுழிப்பிரிவு, பொருட்பிணிப்பிரிவு, பரத்தையர் பிரிவு என்ற ஆறு ஆகும். இந்த…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 11
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 10. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 4 “என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை இனித்தெய்வமேஉன் செயலே என்று உணரப் பெற்றேன் இந்த ஊன் எடுத்தபின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை பிறப்பதற்குமுன் செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே!” ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற கொதிப்பினால் ஏற்பட்ட துணிவு வெறியில் பூரணி அந்தத் திருட்டுக் கிழவனைப் பிடித்து, அவன் மேல் துண்டாலேயே கைகளைக் கட்டிப் போட முயன்றாள். சங்கிலியைப் பறிகொடுத்த கமலாவோ பயந்தோடி வந்து அவன் பூரணியால் பிடிக்கப்பட்ட இடத்தில் நழுவி விழுந்திருந்த சங்கிலியின் மூன்றாய் அறுந்துபோன துணுக்குகளைத்…
தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 13/17
(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 12/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி : 13/17 பெண்களே நாட்டிற்குப் பெருவிளக்காம் ஆதலின்நம்பெண்களைத் தாழ்த்துவது பேதமையாம் அம்மானைபெண்களைத் தாழ்த்துவது பேதமையாம் என்றக்கால்பெண்புத்தி பின்புத்தி என்றதேன் அம்மானைஎனல்தவறு முன்னேற்றம் ஈயவேண்டும் அம்மானை (61) சீரிய பண்புடைய செந்தமிழ்ப் பெண்மக்கள்கூரியநல் மதிநுட்பம் கொண்டவர்காண் அம்மானைகூரியநல் மதிநுட்பம் கொண்டவர்கள் என்பதைநீநேரிய சான்றொன்றால் நிறுவிடுவாய் அம்மானைசங்ககால ஒளவைமுதல் சான்றுபலர் அம்மானை (62) காய்கனிகள் வளமிக்க கவின்தமிழ்நாடு ஓங்கநம்தாய்கட்கு வீரம் தழைக்கவேண்டும் அம்மானைதாய்கட்கு வீரம்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 35
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 34. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 14 தொடர்ச்சி எங்களைப் பின் தொடர்ந்திருக்கிறார். நான் அவரைக் கவனிக்கவில்லை. நான் ஏறிய பேருந்திலும் ஏறினார். அங்கும் முரடன் நடந்து கொண்ட முறையைக் கவனித்திருக்கிறார். அவன் ஒதுங்காமல், முன்னுக்கும் செல்லாமல் என் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தான் அல்லவா? என் பக்கமாகத் தன் கால்களை நகர்த்தி என் கால்கள்மேல் படுமாறு செய்தான். நான் என் கால்களை எவ்வளவோ ஒடுக்கி உட்கார்ந்தும் பயன் இல்லை. எனக்கு அழமட்டாத குறைவாக இருந்தது. ஒரு புறம் கோபமாகவும் இருந்தது….
