உ.வே.சா. வின் என் சரித்திரம் 87 : அத்தியாயம்-53 : அம்மை வடு

(உ.வே.சா. வின் என் சரித்திரம் 86 : விடை பெறுதல்-தொடர்ச்சி) என் சரித்திரம் அம்மை வடு நான் பல்லக்கில் சூரிய மூலையை அடைந்தபோது பகல் 11 மணி இருக்கும் அம்மையென்ற காரணத்தால் என்னை நேரே அம்மானுடைய வீட்டிற்குள் செல்ல அங்கிருந்தவர்கள் அனுமதிக்கவில்லை வெளியூர்களிலிருந்து சிலர் வந்திருந்தனர். நான் இருந்த பல்லக்கு வீட்டுக்கு எதிரே உள்ள தென்னந்தோப்பில் இறக்கி வைக்கப்பட்டது. எனக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை. அங்கே அவ்வளவு பேர்கள் கூடியிருந்ததற்குக் காரணம் இன்னதென்று தெரிந்த போது நான் இடி விழுந்தவன் போலானேன். நான் அங்கே…

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 15 : வீரக்கல்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 14 : வீர மாதர்-தொடர்ச்சி) தமிழர் வீரம் வீரக்கல் வீரரை வியந்து போற்றிய நாடு தமிழ்நாடு. போர் முனையில் விழுப்புண் பட்டு விழுந்தவர்க்கும், கடும்புலியைத் தாக்கி வென்ற காளையர்க்கும், இன்னோரன்ன வீரம் விளைத்தவர்க்கும் வீரக்கல் நாட்டிச் சிறப்பைச் செய்தனர் தமிழ்நாட்டார். நடுகல்வீரருக்கு நாட்டுதற்கேற்ற கல்லை முதலில் தேர்ந்தெடுப்பர்; எடுத்த கல்லைப் புனித நீராட்டுவர்; வீரனுடைய பீடும் பேரும் அதில் எழுதுவர்; உரிய இடத்தில் அதனை நாட்டுவர்; மாலையும் மயிற் பீலியும் சூட்டுவர். இவ்வாறு நட்ட கல்லைத் தெய்வமாகக் கொண்டு…

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 03. என் தமிழ்ப்பணி

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 02. என் கடன் பணி செய்து கிடப்பதே! – தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி தலைமையுரையில், ஞானியார் அவர்கள் “கோவிந்தன் பேசிய நேரம் சிறிய நேரம் என்றாலும், என் சிந்தனைக்கு மட்டுமல்லாமல் அனைவர் சிந்தனைக்கும் அரிய வேலை கொடுத்துவிட்டான்” எனக் கூறிப் பாராட்டினார்.மற்றுமொரு நிகழ்ச்சி : நான் வித்துவான் பட்டம் பெறாத நேரம். ஆசிரியர்பால் பின்னர் தமிழ் கற்க வந்த கோமான் ம. வீ. இராகவன் அவர்கள் அந்த ஆண்டு. வித்துவான் தேர்வு எழுதியிருந்தார், அந்நிலையில் திருவத்திபுரத்திற்கு வருகை…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 48 : தொல்காப்பியம் உணர்ந்த காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 47 : பூங்கொடியின் உறுதிமொழி – தொடர்ச்சி) பூங்கொடி அதிகாரம் 10. தொல்காப்பியம் உணர்ந்த காதை குறளுரை பரப்புதல் நற்பொருள் உணர்ந்த பொற்கொடி குறளின்சொற்பொருள் தெளிந்து சூழ வருவார்க்குஉணர்த்தும் பணியை உவப்புடன் பூண்டனள்;கணக்கில் அடங்கார் கற்று நடந்தனர்,இணர்ப்பூங் குழலாள் இவ்வணம் இருந்துழித் 5 தாமரைக்கண்ணி வருகை காமரு பூங்கொடி கடிதின் எழீஇத்தூமன மகிழ்வால் தொழுதனள் தழீஇநீராற் கண்ணை நிறைத்துப் புகழ்மொழிகூறா நின்றனள்; கூறிய நங்கையை 10ஆரத் தழுவி அப்பெரு மாட்டிவீரத் திருமகள் வாழிய என்றனள்; பூங்கொடி வினவல் அன்னையும்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்- ஊ

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-உ-தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 99-120 99. உதயணசரிதம் – பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் 1924100. பத்மினி – வே. முத்துசாமி ஐயர் 1924101. (உ)லோகமான்ய பாலகங்காதர திலக் – கிருட்டிணசாமிசருமா 1924102. பிரமானந்த நான்மணி மாலை – பி.பி. நாராயணசாமி நாயுடு 1924103. தஞ்சாவூர் சில்லாவின் வரலாறு – ஆர். விசுவநாத ஐயர் 1924104. சிவனடியார் திருக்கூட்டம் 1925105. தேசபந்து விசயம் – ம. க. சயராம்…

உ.வே.சா. வின் என் சரித்திரம் 86 : விடை பெறுதல்

(உ.வே.சா. வின் என் சரித்திரம் 85: திருப்பெருந்துறைப் புராணம் – தொடர்ச்சி) என் சரித்திரம் விடை பெறுதல் 121 செய்யுட்களில் நாட்டுப்படலம் நிறைவேறியது. கடவுள் வணக்கம்முதலியவற்றோடு 158 செய்யுட்கள் இயற்றப் பெற்றன. அடிக்கடி சுப்பிரமணியதேசிகர் புராணத்தைப்பற்றிப் பிள்ளையவர்களை விசாரிப்பார். நான் தனியேசென்று பேசும்போது என்னையும் வினவுவார். நான் இன்ன இன்ன பகுதிகள்நிறைவேறின என்று சொல்லுவேன். அவருக்குச் செய்யுட்களைக் கேட்கவேண்டுமென்ற ஆவல் உண்டாகும். நாட்டுப்படலம் முடிந்தவுடன் ஆசிரியர் அதுவரையில் ஆனபகுதிகளைச் சுப்பிரமணிய தேசிகர் முன்பு படித்துக்காட்டச் செய்தார்.அச்சமயம் கும்பகோணத்திலிருந்து தியாகராச செட்டியார் வந்திருந்தார்.செய்யுட்களைக் கேட்டுத் தேசிகர்…

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 14 : வீர மாதர்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 13 : வீர விளையாட்டு-தொடர்ச்சி) தமிழர் வீரம்வீர மாதர் வீரத் தாய்தமிழ் நாட்டில் பெண்களும் மனத்திண்மை உடைய வராய் விளங்கினார்கள்; தன் மக்கள் வீரப்புகழ் பெறல் வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். போர்க்களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட மைந்தர் செயல் கண்டு அவரைப் பெற்ற போதிலும் பெருமகிழ்வுற்ற வீரத் தாயர் பலர் தமிழ் நாட்டில் இருந்தனர். வாளெடுத்த தாய்வயது முதிர்ந்து, வற்றி உலர்ந்து, தள்ளாத நிலையில் இருந்தாள் ஒரு தாய். அவள் மகன் போர் புரியச் சென்றான். அவன்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 47 : பூங்கொடியின் உறுதிமொழி

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 46 : நாவலரின் முன்னை நிகழ்ச்சி) பூங்கொடி அடிகள் தம்மை, அறியார் கூடி 70நாத்திகர் என்று நவிலுதல் கண்டோம்;வேத்திய லாளரும் வீண்துயர் தந்தும்கண்டின் சுவையைத் தொண்டிலே கண்டனர்;தொண்டர்தம் பெருமை சொல்லவும் போமோ! பூங்கொடியின் உறுதிமொழி எத்துயர் வரினும் எடுத்த பணியேஇலக்கெனக் கொண்டுநீ இயங்கலால் அன்றோஇலக்கியர் என்றோர் விருதினைத் தந்தனர்;பேரா சிரியப் பெரியோய்! நின்போல் 80யாரே செயல்செய வல்லார்? யானும்நின்வழி கொண்டேன், நிலையாய் நிற்பேன்,என்பெரு வாழ்வை ஈந்தனென் பணிக்கே’எனுமொழி கூறி இருந்தனள் ஆங்கே; குறளுரை தெளிதல் கலகப் பொருளுடை கடிகதில்…

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 13 : வீர விளையாட்டு

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 12 : தியாக வீரம்- தாெடர்ச்சி) தமிழர் வீரம்வீர விளையாட்டு வீர விளையாட்டில் என்றும் விருப்பமுடையவர் தமிழர். வேட்டையாடல், மல்லாடல், ஏறுதழுவுதல் முதலிய விளையாட்டங்கள் மிகப் பழமை வாய்ந்தனவாகும். வேட்டையைத் தொழிலாகக் கொண்டவர் வேடர் என்றும், வேட்டுவர் என்றும் பெயர் பெற்றனர். மற்றும் வில்லாளராகிய பெருநில மன்னரும், குறுநில மன்னரும் பொழுதுபோக்காக வேட்டையாடினர். காவிரிக் கரையிலும், பாலாற்றங் கரையிலும் பரந்து நின்ற காடுகளில் வேட்டையாடப் புறப்பட்ட சோழமன்னன் கோலத்தைக் கலிங்கத்துப் பரணியிலே காணலாம். மல்லாட்டத்தில் வல்லவர் மல்லர் எனப்படுவர்….

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 01. பதிப்பரை

என் தமிழ்ப்பணி பதிப்புரை இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் வரலாற்றில் ஒரு சிறப்பிடத்தைப் பெறத்தக்க வகையில், நல்ல தமிழ் அறிஞராக, வரலாற்றுத் திறனாய்வாளராக, செந்தமிழ்ப் பேச்சாளராக, இலக்கியப் படைப்பாளராக, பாதை மாறாத பகுத்தறிவுவாதியாக, அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவராக, என பல்திறன் படைத்த நற்றமிழ்ப் புலவராக விளங்கியவர், புலவர் கா. கோவிந்தனார் அவர்கள் “தமிழுக்கும், தமிழ்ப் புலவர்கட்கும், தமிழ் நாட்டுக்கும் தொண்டாற்றத் தன்னையே அருப்பணித்தவர்” என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பெற்ற பேறு பெற்றவர், பைந்தமிழ்ப் புலவராய் உயர்ந்து, சங்கத் தமிழ்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 46 : நாவலரின் முன்னை நிகழ்ச்சி

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 45 : நாவலர் ஆறுதல் உரை – தொடர்ச்சி) பூங்கொடிநாவலரின் முன்னை நிகழ்ச்சி மீன்புலி கயலால் மேம்படு தமிழகவிடுதலை குறித்து விளிம்பினேன்; தமிழ்மொழி 50கெடுதலை இன்றிக் கிளந்தெழப் புகன்றேன்,இவையே யான்செய் தவறென இயம்பி,நவைஎனப் பழிஎன நாணார் விலக்கினர்; நாவலர் ஊக்கமூட்டல் என்றவர் ஊக்கினர்; இவ்வுரை கேட்டாள்;`நன்றுநன் றைய! நான்அய ரேன்இப்பணியே உயிராப் பாரில் கொண்டுளேன்; உலகியல் நிலைமை கலையெனக் கொண்டனர்; கருதின் ஒருநாள்பெரியார் அறிஞர் என்றெலாம் பேசுவர்;மறுநாள் மாறி `மதியே இல்லார்,சிறியார்’ எனப்பழி செப்புவர் அந்தோ! 65 தொண்டர்தம்…

உ.வே.சா. வின் என் சரித்திரம் 53: சிதம்பரம்பிள்ளையின் கலியாண நிறைவு

(உ.வே.சா. வின் என் சரித்திரம் 52: சிதம்பரம்பிள்ளையின் கலியாணம் – தொடர்ச்சி) என் சரித்திரம்சிதம்பரம்பிள்ளையின் கலியாண நிறைவு அவற்றைக் கவனிப்பதற்காக அவர் அங்கே இருக்கிறார்.கல்லிடைக்குறிச்சியிலும் திருவாவடுதுறையைப் போலவே மடமும் அதற்குஅங்கமாகிய கோயில் முதலிய இடங்களும் பரிவாரங்களும் உண்டு.சந்நிதானம் சின்னப் பட்டத்தில் இருந்தபோது சில வருடங்கள் அங்கேஎழுந்தருளி இருந்தது இந்த ஆதீனத்திற்கு இராசதானி நகரம் போன்றதுதிருவாவடுதுறை. இளவரசர் இருத்தற்குரிய நகரம்போல விளங்குவதுகல்லிடைக்குறிச்சி, சின்னப் பட்டத் திலுள்ளவர்கள்கல்லிடைக்குறிச்சியிலிருப்பது வழக்கம். அவர்களை இளவரசென்றும்சொல்வதுண்டு.” “திருவாவடுதுறை ஆதீனம் தமிழ்நாடு முழுவதையும் ஆட்சி புரிவதுபோலல்லவா இருக்கிறது?” என்று நான் ஆச்சரியத்தோடு வினவினேன்….

1 2 78