திருக்குறள் அறுசொல் உரை – 064. அமைச்சு : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 063. இடுக்கண் அழியாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 064. அமைச்சு அமைச்சர்தம் தகுதிகள், பண்புகள், ஆளுமைத் திறன்கள். செயற்பாடுகள்.   கருவியும், காலமும், செய்கையும், செய்யும்     அருவினையும், மாண்ட(து) அமைச்சு.           செய்கருவி, காலம், செயல்கள்,         செய்முறைகளில் சிறந்தார், அமைச்சர்.   வன்கண், குடிகாத்தல், கற்(று)அறிதல், ஆள்வினையோ(டு)     ஐந்துடன் மாண்ட(து) அமைச்சு.           கல்வி, குடிஅறிவு, குடிகாத்தல்,           முயற்சி, உறுதி அமைச்சியல்.   பிரித்தலும், பேணிக்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 060. ஊக்கம் உடைமை

(அதிகாரம் 059. ஒற்று ஆடல் தொடர்ச்சி) 02.  பொருள் பால் 05.  அரசு இயல் அதிகாரம் 060. ஊக்கம் உடைமை எவ்வகைச் சூழலையும் கலங்காது, எதிர்கொண்டு சமாளிக்கும் மனஉறுதி   ‘உடையர்’ எனப்படுவ(து) ஊக்கம்; அஃ(து)இல்லார்,       உடைய(து) உடையரோ மற்று?         ஊக்கம் உடையாரே, ‘உடையார்’;         மற்றையார், உடையார் ஆகார்.   உள்ளம் உடைமை, உடைமை; பொருள்உடைமை,       நில்லாது; நீங்கி விடும்.         ஊக்கமே, நிலைக்கும் பெரும்செல்வம்;         பொருள்செல்வமோ நில்லாது; நீங்கும்.   ”ஆக்கம் இழந்தேம்” என்(று), அல்லாவார்,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 059. ஒற்று ஆடல்

(அதிகாரம் 058. கண்ணோட்டம் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 059. ஒற்று ஆடல் உள்,வெளி நாடுகளில், எல்லா நடப்புக்களையும், உளவு பார்த்தல்   ஒற்றும், உரைசான்ற நூலும், இவைஇரண்டும்,       தெற்(று)என்க, மன்னவன் கண்.         உளவும், உளவியல் நூல்தெளிவும்         ஆட்சியரிடம் அமைதல் வேண்டும்.   எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை, எஞ்ஞான்றும்       வல்அறிதல், வேந்தன் தொழில்.         எல்லார்க்கும் எல்லாமும் கிடைப்பவற்றை,         ஆட்சியான் உளவால் ஆராய்க.   ஒற்றினான் ஒற்றிப், பொருள்தெரியா மன்னவன்      …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 058. கண்ணோட்டம்

(அதிகாரம் 057. வெருவந்த செய்யாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 058. கண்ணோட்டம்  உயிர்கள்மீது கண்களின் ஓட்டம், அதனால் விளையும் இரக்கம்.   கண்ணோட்டம் என்னும், கழிபெரும் காரிகை,       உண்மையான், உண்(டு),இவ் உலகு.         இரக்கம் என்னும், பேரழகுப்         பண்பால்தான், உலகம் இருக்கிறது. 0572, கண்ணோட்டத்(து) உள்ள(து), உல(கு)இயல்; அஃ(து),இன்றேல்,       உண்மை நிலக்குப் பொறை.         இரக்கத்தால் உலகுஇயல் உண்டு;         இரக்கம்இலான் பூமிக்குச் சுமை. . பண்என்ஆம்? பாடற்(கு) இயை(பு)இன்றேல்; கண்என்ஆம்?      …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 057. வெருவந்த செய்யாமை

(அதிகாரம் 056. கொடுங்கோன்மை தொடர்ச்சி) 02.பொருள் பால் 05.அரசு இயல் அதிகாரம் 057. வெருவந்த செய்யாமை   குடிமக்கள், அஞ்சி நடுங்கும்படி, கொடுமைச் செயல்கள் செய்யாமை   தக்காங்கு நாடித், தலைச்செல்லா வண்ணத்தால்,      ஒத்(து),ஆங்(கு), ஒறுப்ப(து), வேந்து.    தக்கபடி ஆய்ந்து, குற்றம்   மீளநடவாவாறு, பொருந்தத் தண்டிக்க.   கடி(து)ஓச்சி, மெல்ல எறிக, நெடி(து)ஆக்கம்,       நீங்காமை வேண்டு பவர்.         கடுமையாக மிரட்டி, மென்மையாகத்        தண்டிப்பதே, ஆக்க நீதி.   வெருவந்த செய்(து)ஒழுகும், வெங்கோலன் ஆயின்,       ஒருவந்தம்,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 056. கொடுங்கோன்மை

(அதிகாரம் 055. செங்கோன்மை தொடர்ச்சி) 02.பொருள் பால் 05.அரசு இயல் அதிகாரம் 056. கொடுங்கோன்மை   மக்களை அலைக்கழிக்கும், தீமையான, முறைஇல்லாக் கொடுமையான வல்ஆட்சி.   கொலைமேற்கொண் டாரின் கொடிதே, அலைமேற்கொண்(டு),      அல்லவை செய்(து)ஒழுகும், வேந்து.   மக்களை வருத்தி, அலைக்கழிக்கும், ஆட்சி, கொலையினும் கொடிது.   வேலொடு நின்றான்,”இடு”என்றது போலும்,       கோலொடு நின்றான் இரவு.   வன்முறையால் வரிகேட்டல், வேல்காட்டிக் கொள்ளை அடித்தலுக்குச், சமம்.   நாடொறும் நாடி, முறைசெய்யா மன்னவன்,       நாடொறும் நாடு கெடும்.   நாள்தோறும்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 055. செங்கோன்மை

(அதிகாரம் 054. பொச்சாவாமை தொடர்ச்சி) 02.பொருள் பால் 05.அரசு இயல் அதிகாரம் 055. செங்கோன்மை   மக்களது நலன்களைக் கருதியே, முறையோடு நடைபெறும் நல்ஆட்சி    ஓர்ந்து,கண் ணோடா(து), இறைபுரிந்து, யார்மாட்டும்,       தேர்ந்து,செய்வ(து), அஃதே முறை.   ஆராய்ந்த, இரக்கம் காட்டாத நடுநிலைத் தண்டனயே முறைஆம்.   வான்நோக்கி, வாழும் உல(கு)எல்லாம்; மன்னவன்       கோல்நோக்கி, வாழும் குடி.   உலகம் இன்மழையால் வாழும்; மக்கள், நல்ஆட்சியால் வாழ்வார்.   அந்தணர் நூற்கும், அறத்திற்கும், ஆதியாய்       நின்றது, மன்னவன் கோல்,  …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 054. பொச்சாவாமை

(அதிகாரம் 053. சுற்றம் தழால் தொடர்ச்சி) 02.பொருள் பால் 05.அரசு இயல் அதிகாரம் 054. பொச்சாவாமை  மகிழ்ச்சியிலும், கடமை மறவாமை, மனத்தின்கண் சோர்வு அடையாமை   இறந்த வெகுளியின் தீதே, சிறந்த      உவகை மகிழ்ச்சியின், சோர்வு.        மகிழ்ச்சியில் செயலை மறத்தல்        மிகுந்த சினத்தைவிடத், தீயது.   பொச்சாப்புக் கொல்லும் புகழை, அறிவினை,       நிச்ச நிரப்புக்கொன்(று) ஆங்கு.    மறதிமை புகழையும் கொல்லும்;         வறுமை அறிவையும் கொல்லும்.   பொச்சாப்பார்க்(கு) இல்லை புகழ்மை; அது,உலகத்(து)      எப்பால்நூ லோர்க்கும்,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 053. சுற்றம் தழால்

(அதிகாரம் 052. தெரிந்து வினை ஆடல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 053. சுற்றம் தழால்   உறவினர்க்கு வேண்டியன கொடுத்து, அரவணைத்துக் காப்பாற்றும் உயர்பண்பு.   பற்(று)அற்ற கண்ணும், பழைமை பாராட்டுதல்,        சுற்றத்தார் கண்ணே, உள.        ஏழ்மையிலும் பழைய உறவைக்        கொண்டாடல், உறவாரிடமே உண்டு.   விருப்(பு)அறாச் சுற்றம் இயையின், அருப்(பு)அறா      ஆக்கம் பலவும், தரும்.        விருப்பம் குறையா உறவாரால்        அறுபடா வளநலம் அமையும்.   அள(வு)அளா(வு)…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 052. தெரிந்து வினை ஆடல்

(அதிகாரம் 051. தெரிந்து தெளிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 052. தெரிந்து வினை ஆடல் பணியில் அமர்த்தியபின், அவர்அவர் திறன்கள் அறிந்து, கையாளுதல்   0511 .நன்மையும், தீமையும், நாடி, நலம்புரிந்த      தன்மையால், ஆளப் படும்.      நன்மை, தீமைகளை, ஆராய்க;       நன்மையரைப் பணியில் அமர்த்துக. வாரி பெருக்கி, வளப்படுத்(து), உற்றவை      ஆராய்வான், செய்க வினை.  வருவாய் பெருக்கி, வளப்படுத்திப், பயன்கள் ஆய்வான் செயற்படுக. அன்(பு),அறிவு, தேற்றம், அவாஇன்மை, இந்நான்கும்,       நன்(கு)உடையான் கட்டே,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 051. தெரிந்து தெளிதல்

(அதிகாரம் 050. இடன் அறிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 051. தெரிந்து தெளிதல் எப்பணிக்கும், தக்காரை ஆராய்ந்து,  தெளிந்து, பணியில் அமர்த்தல்   அறம்,பொருள், இன்பம், உயிர்அச்சம், நான்கின்,       திறம்தெரிந்து, தேறப் படும்.      அறமும், பொருளும், இன்பமும்,  உயிர்அச்சமும், ஆராய்ந்து தேர்க.   குடிப்பிறந்து, குற்றத்தின் நீங்கி, வடுப்பரியும்,       நாண்உடையான் கட்டே, தெளிவு.         நற்குடிமை, குற்றம்இன்மை, பழிக்கு       வெட்குதல் பெற்றாரைத், தெளிக.   அரியகற்(று), ஆ(சு)அற்றார் கண்ணும், தெரியும்கால்,      …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 050. இடன் அறிதல்

(அதிகாரம் 049. காலம் அறிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 050. இடன் அறிதல் வலிமையை, காலத்தை, ஆய்ந்தபின்,  உரிய இடத்தைத் தேர்ந்துஎடுத்தல்.   தொடங்கற்க எவ்வினையும், எள்ளற்க முற்றும்,       இடம்கண்ட பின்அல் லது.         எந்தச் செயலையும் இகழற்க;         இடத்தைக் கண்டபின், தொடங்குக.   முரண்சேர்ந்த மொய்ம்பின் அவர்க்கும், அரண்சேர்ந்(து)ஆம்       ஆக்கம், பலவும் தரும்.    வலியார்க்கும், கோட்டையின் பாதுகாப்பும்         நன்மையும் நல்இடம்தான் தரும்.   ஆற்றாரும், ஆற்றி அடுப; இடன்அறிந்து,…