(அதிகாரம் 050. இடன் அறிதல் தொடர்ச்சி)

attai_kuralarusolurai97

02. பொருள் பால்
05. அரசு இயல்
அதிகாரம் 051. தெரிந்து தெளிதல்

எப்பணிக்கும், தக்காரை ஆராய்ந்து,

 தெளிந்து, பணியில் அமர்த்தல்

 

  1. அறம்,பொருள், இன்பம், உயிர்அச்சம், நான்கின்,

      திறம்தெரிந்து, தேறப் படும்.  

 

 அறமும், பொருளும், இன்பமும்,

 உயிர்அச்சமும், ஆராய்ந்து தேர்க.

 

  1. குடிப்பிறந்து, குற்றத்தின் நீங்கி, வடுப்பரியும்,

      நாண்உடையான் கட்டே, தெளிவு.

 

      நற்குடிமை, குற்றம்இன்மை, பழிக்கு

      வெட்குதல் பெற்றாரைத், தெளிக.

 

  1. அரியகற்(று), ஆ(சு)அற்றார் கண்ணும், தெரியும்கால்,

      இன்மை அரிதே, வெளிறு.

 

 அரியன கற்றுத் தெளிந்த

 அறிவாரிடமும் அறியாமை உண்டு.

 

  1. குணம்நாடிக், குற்றமும் நாடி, அவற்றுள்,

      மிகைநாடி, மிக்க கொளல்.

 

 குணத்தை, குற்றத்தை ஆராய்க;

 மிகுதியை மதிப்பிட்டுத் தெளிக.

 

  1. பெருமைக்கும், ஏனைச் சிறுமைக்கும், தம்தம்

      கருமமே, கட்டளைக் கல்.

 

 பெருமைக்கும், சிறுமைக்கும், அவர்அவர்

செயல்களே உரைகல் ஆம்.

 

  1. அற்றாரைத் தேறுதல் ஓம்புக, மற்(று)அவர்

      பற்(று)இலர், நாணார் பழி.

 

 ஒழுக்கம்இலாரைத் தெளியற்க; பற்றும்

 கொள்ளார்; பழிக்கும் வெட்கார்.

 

  1. காதன்மை கந்து(ஆ), அறி(வு)அறியார்த் தேறுதல்,

      பேதைமை எல்லாம், தரும்.

 

      அன்பினால், அறிவிலியைத் தேர்தல்

      அறியாமை; பணிகளும் கெடும்.

 

  1. தேரான், பிறரைத் தெளிந்தான், வழிமுறை,

      தீரா இடும்பை தரும்.

      ஆராயாது, ஒருவரைத் தெளிந்தால்,

      தீராத் துன்பம்தான் சேரும்.

 

  1. தேறற்க, யாரையும் தேராது; தேர்ந்தபின்,

      தேறுக, தேறும் பொருள்.

 

     ஆராயாது யாரையும் தேராதே;

      தேரின், தேர்ந்த பணிஒதுக்கு.

 

  1. தேரான் தெளிவும், தெளிந்தான்கண் ஐஉறவும்,

      தீரா இடும்பை தரும்.

 

 ஆராயாது தெளிதல், தெளிந்தபின்

 ஐயம்கொள்ளல், தீராத் துன்பம்தான்

-பேராசிரியர் வெ. அரங்கராசன்

(அதிகாரம் 052. தெரிந்து வினை ஆடல்)