திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 049. காலம் அறிதல்
(அதிகாரம் 048. வலி அறிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 049. காலம் அறிதல் செய்யத் துணிந்த செயலுக்குப் பொருந்தும் காலத்தை ஆராய்தல் பகல்வெல்லும், கூகையைக் காக்கை; இகல்வெல்லும் வேந்தர்க்கு, வேண்டும் பொழுது. காக்கை, கோட்டானைப் பகல்வெல்லும்; ஆட்சியார்க்கும் காலம் மிகத்தேவை. பருவத்தோ(டு) ஒட்ட ஒழுகல், திருவினைத், தீராமை ஆர்க்கும் கயிறு. காலத்தோடு பொருந்திய செயற்பாடு, செல்வத்தைப் கட்டிக்காக்கும் கயிறு.. அருவினை என்ப உளவோ….? கருவியான்,…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 048. வலி அறிதல்
(அதிகாரம் 047. தெரிந்து செயல் வகை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 048. வலி அறிதல் செயற்படும் முன்னம், எல்லாவகை வலிமைகளின், திறன்களின் ஆய்வு. வினைவலியும், தன்வலியும், மற்றான் வலியும், துணைவலியும், தூக்கிச் செயல் செயல்வலி, தன்வலி, பகைவலி, துணைவலி ஆராய்ந்து செய்க. ஒல்வ(து), அறிவ(து), அறிந்(து),அதன் கண்,தங்கிச் செல்வார்க்குச், செல்லாத(து) இல். முடிவதை, செயல்அறிவை ஆய்ந்து செய்தால், முடியாததும் இல்லை. உடைத்தம் வலிஅறியார், ஊக்கத்தின்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 047. தெரிந்து செயல் வகை
(அதிகாரம் 046. சிற்றினம் சேராமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 047. தெரிந்து செயல் வகை நன்மை, தீமை போன்றவற்றை நன்குஆய்ந்து செய்யும் செய்முறைகள். அழிவதூஉம், ஆவதூஉம் ஆகி, வழிபயக்கும் ஊதியமும், சூழ்ந்து செயல். ஆவது, அழிவது, பின்விளைவது போன்றவற்றை ஆய்ந்து செய்க. தெரிந்த இனத்தோடு, தேர்ந்(து)எண்ணிச் செய்வார்க்(கு), அரும்பொருள் யா(து)ஒன்றும், இல். செயல்முறைகளைத் தேர்ந்தாரோடு கலந்து செய்வார்க்கு முடியாச்செயல் இல்லை. ஆக்கம்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 046. சிற்றினம் சேராமை
(அதிகாரம் 045. பெரியாரைத் துணைக்கோடல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 046. சிற்றினம் சேராமை இழிகுணங்கள் நிறைந்த கூட்டத்தாரது வழிகளில் சேராத விழிப்புணர்வு. சிற்றினம் அஞ்சும், பெருமை; சிறுமைதான், சுற்றம்ஆச் சூழ்ந்து விடும் பெரியார், சிறியார்க்கு அஞ்சுவார்; சிறியார், சிறியார்க்கு உறவுஆவர். நிலத்(து)இயல்பால், நீர்திரிந்(து)அற்(று) ஆகும்; மாந்தர்க்(கு), இனத்(து)இயல்(பு)அ(து) ஆகும் அறிவு. நிலஇயல்பால், நீரும் திரியும்; இனஇயல்பால், அறிவும் திரியும். மனத்தான்ஆம், மாந்தர்க்(கு)…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 045. பெரியாரைத் துணைக்கோடல்
(அதிகாரம் 044. குற்றம் கடிதல் தொடர்ச்சி) 02. அறத்துப் பால் 05. அரசு இயல் அதிகாரம் 045. பெரியாரைத் துணைக்கோடல் அனைத்து நிலைகளிலும், தகுதிமிகு பெரியாரைத் துணையாகக் கொள்ளல். அறன்அறிந்து, மூத்த அறி(வு)உடையார் கேண்மை, திறன்அறிந்து, தேர்ந்து கொளல். அறம்அறிந்த, மூத்த அறிவாளர் பெருநட்பைத் தேர்ந்து கொள்க. உற்றநோய் நீக்கி, உறாஅமை முன்காக்கும், பெற்றியார்ப் பேணிக் கொளல். வந்த துயர்நீக்கி, வரும்முன்னர்க் காக்கும் பெரியாரைத் துணைக்கொள். அரியவற்றுள் எல்லாம் அரிதே, பெரியாரைப் …
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 006. வாழ்க்கைத் துணை நலம்
(அதிகாரம் 005. இல்வாழ்க்கை தொடர்ச்சி) 001 அறத்துப் பால் 002 இல்லற இயல் அதிகாரம் 006. வாழ்க்கைத் துணை நலம் கணவர், மனைவியரது நல்பண்புகளும், இணைஇலாப் பெண்ணின் பெருமைகளும். மனைத்தக்க மாண்(பு)உடையள் ஆகித்,தன் கொண்டான் வளத்தக்காள், வாழ்க்கைத் துணை. மனைஅறத்தாள், கணவற்கு வளம்தரு தகுதியள்; நலம்சார் துணை. மனைமாட்சி இல்லாள்கண் இல்ஆயின், வாழ்க்கை, எனைமாட்சித்(து) ஆயினும் இல். இல்லப்பண்பு இல்லாளிடம் இல்எனின், மற்ற சிறப்புகளால்…
