(அதிகாரம் 045. பெரியாரைத் துணைக்கோடல் தொடர்ச்சி)

attai_kuralarusolurai03

02. பொருள் பால்
05. அரசு இயல்
அதிகாரம் 046. சிற்றினம் சேராமை     

இழிகுணங்கள் நிறைந்த கூட்டத்தாரது

வழிகளில் சேராத விழிப்புணர்வு.

 

  1. சிற்றினம் அஞ்சும், பெருமை; சிறுமைதான்,

      சுற்றம்ஆச் சூழ்ந்து விடும்

 

    பெரியார், சிறியார்க்கு அஞ்சுவார்;

        சிறியார், சிறியார்க்கு உறவுஆவர்.

 

  1. நிலத்(து)இயல்பால், நீர்திரிந்(து)அற்(று) ஆகும்; மாந்தர்க்(கு),

     இனத்(து)இயல்(பு)அ(து) ஆகும் அறிவு.

 

   நிலஇயல்பால், நீரும் திரியும்;

       இனஇயல்பால், அறிவும் திரியும்.

 

  1. மனத்தான்ஆம், மாந்தர்க்(கு) உணர்ச்சி; இனத்தான்ஆம்,

     ”இன்னான்” எனப்படும் சொல்.

 

     மனத்தால், மனிதர்க்கு உணர்ச்சி;

       இனத்தால், ‘இன்னான்’ எனப்படுவான்.

 

  1. மனத்(து)உளது போலக் காட்டி, ஒருவற்(கு).

     இனத்(து)உள(து) ஆகும், அறிவு.

 

    மனத்தால் அமைதல்போல் காட்டினும்,

       இனத்தால்தான், அறிவும் அமையும்.

 

  1. மனம்தூய்மை, செய்வினை தூய்மை, இரண்டும்,

     இனம்தூய்மை தூஆ வரும்.

 

     மனத்தூய்மை, செயல்தூய்மை போய்ச்சேரும்

       இனத்தின் தூய்மையால், வந்துசேரும்.

 

  1. மனம்தூயார்க்(கு), எச்சம்நன்(று) ஆகும்; இனம்தூயார்க்(கு),

     இல்லை,நன்(று) ஆகா வினை.

 

    மனத்தூயார்க்கு, விட்டுச் செல்வனவும்,

       இனத்தூயார்க்கு, எல்லாமும் நல்லனஆம்.

 

  1. மனநலம், மன்னுயிர்க்(கு) ஆக்கம்; இனநலம்,

      எல்லாப் புகழும் தரும்.

 

      மனநலம் நல்வளர்ச்சி தரும்;

        இனநலம் எல்லாப் புகழையும்.

 

  1. மனநலம், நன்(கு)உடையர் ஆயினும், சான்றோர்க்(கு),

     இனநலம், ஏமாப்(பு) உடைத்து.

 

     மனநலச் சான்றோர்க்கும், மனநலம்சார்

       இனநலம், பாதுகாப்புத் தரும்.

 

  1. மனநலத்தின் ஆகும், மறுமை;மற்(று) அஃதும்,

     இனநலத்தின், ஏமாப்(பு) உடைத்து.

 

    மனநலத்தார்க்கு, நல்ல மறுபிறப்பு;

       இனநலம், அதனைக் காக்கும்.

 

  1. நல்இனத்தின், ஊங்கும் துணைஇல்லை; தீஇனத்தின்,

     அல்லல் படுப்பதூஉம், இல்.

 

     நல்இனமே, நல்துணை; தீயஇனமோ,

       தீராத துன்பத் துணையே!

பேராசிரியர் வெ. அரங்கராசன்

ve.arangarasan04(அதிகாரம் 047. தெரிந்து செயல் வகை)