நான்!    துன்பங்கள் யார்படினும் துடிக்கின்றவன் பிறர் கண்ணீரைக் கவிதையாய் வடிக்கின்றவன்!   கொடுமைக்கு அறம்பாடி முடிக்கின்றவன்  – அதன் குரல்வளை நெரித்துயிர் குடிக்கின்றவன்!   வன்முறை யார்செயினும் வெடிக்கின்றவன் – அந்தப் புன்முறை போய்மாளப் பொடிக்கின்றவன்!   பெயருக்கா எழுதுகோல் பிடிக்கின்றவன்? –என்றன் எழுத்தாலே இனப்பகை இடிக்கின்றவன்!   அகரம் அமுதன் http://agaramamutha.blogspot.in/2016/03/blog-post_76.html