நான்! 

 

துன்பங்கள் யார்படினும்

துடிக்கின்றவன் பிறர்

கண்ணீரைக் கவிதையாய்

வடிக்கின்றவன்!

 

கொடுமைக்கு அறம்பாடி

முடிக்கின்றவன்  – அதன்

குரல்வளை நெரித்துயிர்

குடிக்கின்றவன்!

 

வன்முறை யார்செயினும்

வெடிக்கின்றவன் – அந்தப்

புன்முறை போய்மாளப்

பொடிக்கின்றவன்!

 

பெயருக்கா எழுதுகோல்

பிடிக்கின்றவன்? –என்றன்

எழுத்தாலே இனப்பகை

இடிக்கின்றவன்!

 

  • அகரம் அமுதன்

http://agaramamutha.blogspot.in/2016/03/blog-post_76.html