தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 1/3 – மறைமலை இலக்குவனார்

தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 1/3  இயல்பாகத் தமிழுக்கு முதன்மையும் பெருமையும் வழங்கிப் போற்றிவந்த தமிழர் வேற்றவர் மொழியும் பண்பாடும் அறிமுகமான பொழுதில் தமிழின் தனித்தன்மையும் மேலாண்மையும் பின்னுக்குத் தள்ளப்படக்கூடாது என எழுச்சியுடன் இயங்கிய செயல்முறையே தமிழியக்கம் என வரையறை அளிக்கலாமல்லவா? சமணர் நுழைவும் அர்த்தமாகதி, சௌரசேனி முதலான பிராகிருதங்களின் அறிமுகமும் ஏற்பட்டவேளையில் வடசொற் கிளவி வடவெழுத்தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே என்று விதி வகுத்த தொல்காப்பியரே முதல் தமிழியக்கப் போராளி. சமற்கிருதத்தின் தோற்றத்திற்கு முன்னமேயே வகுக்கப்பெற்ற இந்த விதி பின்னாளில் சமற்கிருதம் தமிழருக்கு…

வடமொழி வல்லாண்மையை முறியடிப்போம்! – மறைமலை இலக்குவனார்

வடமொழி வல்லாண்மையை முறியடிப்போம்!   வடக்கே ஆயிரம் மொழிகள் இருந்தாலும் வடமொழி என்னும் சொல் சமசுகிருதத்தையும் தெற்கே ஆயிரம் மொழிகள் நிலவினாலும் தென்மொழி என்பது தமிழையும் தொன்றுதொட்டுக் குறித்து வருகின்றன. தென்மொழியாகிய தமிழ், இன்றைய இந்தியாவின் தெற்குப்பகுதி முழுமையையும், இன்னும் கூடுதலாக, இன்றைய குமரிக்குத் தெற்கே நிலவிய நிலப்பகுதியையும் சேர்த்துத் தன் ஆளுகையில் கொண்டிருந்தது. தென்மொழி இயற்கையான மொழி. அக்காலத் தமிழரின் அறிவுவளர்ச்சியாலும், சிந்தனை முதிர்ச்சியாலும் இலக்கிய வளமும், இலக்கணச் செப்பமும் கொண்டு சிறந்தமொழி. வடமொழி செயற்கையான மொழி. வடநாட்டில் நிலவிய பிராகிருத மொழிகளின்…

திருக்குறள் விக்கி – குறள் நிகழ்வு ஒருங்கிணைப்புத் தளம்

உலகெங்கும் இயங்கும் திருக்குறள் அமைப்புகளுக்கு ஒரு வேண்டுகோள்” குறள் பரப்பும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைக்கும் நோக்குடனே திருக்குறள் விக்கி தொடங்கப்பட்டுள்ளது. நீங்கள் நடத்தும் கூட்ட நிகழ்ச்சிகளை எம்பி4  வடிவத்தில் அனுப்புங்கள். காணொளி நறுக்குகளாகப் பதிவேற்றம் செய்யலாம். பத்துப் பத்து மணித்துளிகள் கொண்ட பதிவுகளாக அமைக்கவேண்டும். அப்போதுதான் அலுப்பு தட்டாமல் கேட்கலாம். உங்கள் ஊரில் இருபதுபேர் கூடிய கூட்டமாக இருப்பினும் வலைத்தளம் மூலம் ஆறு கோடித் தமிழரும் கேட்கும்படிச் செய்யலாம் அல்லவா?  வான்புகழ் வள்ளுவம் மானிடம் தழைக்க வாய்த்த மாமருந்து.இன்றைய சூழலில் உலகம் முழுமையும் அமைதி நிலைத்திட அல்லல் தொலைந்திட…

மாம்பலம் ஆ.சந்திரசேகரின் “வைகறை வண்ணங்கள்” —நூலறிமுகம்: மறைமலை இலக்குவனார்

மாம்பலம் ஆ.சந்திரசேகரின்  “வைகறை வண்ணங்கள்” —நூலறிமுகம்    ‘கவிதை என்பது கருத்துகளை விளக்கமாக மனத்தில் தைக்கும்படிக் கூறுவது.’ ‘வாழ்வின் எதிரொலியே கவிதை’ சமகால வாழ்வின் சரியான படப்பிடிப்பு’ என்றெல்லாம் கவிதையைப்பற்றிய  எண்ணற்ற விளக்கங்களும் வரையறைகளும் வழங்கிவருகின்றன.   குழந்தையின் குறுநகை ஒரு கவிதை; காலைக் கதிரவனின் கோல எழில் ஒரு கவிதை; மாலைநிலாவின் மயக்கும் எழில் ஒரு கவிதை என்று நாம் அடுக்கிக்கொண்டே செல்லலாம். நம்மை ஈர்க்கும் நயமும் எழிலும் சுவையும் திறனும் கொண்ட அனைத்துமே கவிதைகள் தாம். அக் கவிதைகளைச் சுவைக்கத் தெரிந்தால்…

தொல்லைக்காட்சிகள் வேண்டா! – மறைமலை இலக்குவனார்

தொல்லைக்காட்சிகள் வேண்டா!     ஊடகம் என்பது மிகவும் ஆற்றல் வாய்ந்தது.  மனித மனங்களை ஊடுருவித் தாக்கும் மின்சாரம் போன்றது.  தனி மனித மனங்களை மட்டுமன்று ஒரு சமுதாயத்தின் போக்கையே மாற்றிக் காட்டும் பேராற்றல் வாய்ந்தது என்பதனை வியத்துநாம் போர் முதல் சிரியாத்து தாக்குதல் வரை நிகழ்ந்த நிகழ்வுகள் மெய்ப்பித்துள்ளன. இதனால் ஊடகங்கள் பெரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டியுள்ளது.பெரும்பான்மையும் அத்தகைய பொறுப்புணர்வை நம் நாட்டு ஊடகங்களிடம் நன்கு காணமுடிகிறது.   சில சமயங்களில் பரபரப்புக்காக சிறிய செய்திகள்தானே என்று ஒளி/ஒலிபரப்பிவிட்டால் அவற்றின் தாக்கம் பேரளவில்…

சி.இலக்குவனார் – சில நினைவுகள் : தீக்கதிர்

சி.இலக்குவனார் – சில நினைவுகள் “ஆறடி வளர்ந்த நல்ல ஆண்மையர் தோற்றம் விஞ்சம் மாறனோ ஆரன் தானோ மற்றெனின் சேரர்கோனோ வீறுடன் நீண்டமேலாடை வீசுகை முழந்தாள்தோய ஏறுபோல் நிமிர்ந்து செல்லும் இலக்குவனார்…” என்னும் மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் அவர்களின் நயமிகு பாடலடிகள் இலக்குவனாரை உள்ளத்திரையில் பதியவைக்கும். இலட்சுமணன் எனத் தமது பெற்றோரால் பெயரிடப்பட்டிருந்தவர், பள்ளிப்பருவத்தில், தமது தமிழாசான் சாமி. சிதம்பரனார் வழங்கிய அறிவுரையால், இலக்குவன் எனத் தமிழ்மணம் கமழும் பெயராக மாற்றிக் கொண்டார். “இராமனை ஏற்றுக்கொள்ளாத கருஞ்சட்டைக்காரனாகிய நீ இலட்சுமணன் எனப் பெயர் வைத்துக்கொள்வதேன்?” எனத்…

தாய்மொழிநாளில் பேரா.மறைமலை காணுரை – ‘சன்’ தொலைக்காட்சி

சன் தொலைக்காட்சிக்குப் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் அளித்த நேர்காணல் – உரை வடிவில்   இந்த ஆண்டு ‘உலகத் தாய்மொழி நாள்’ (மாசி 09, 2047-பிப்பிரவரி 21, 2016) அன்று பேராசிரியர் மறைமலை இலக்குவனார் சன் தொலைக்காட்சியின் ‘விருந்தினர் பக்கம்’ நிகழ்ச்சியில் ‘உலகத் தாய்மொழி நாள்’ குறித்து அளித்த நேர்காணலின் உரை வடிவம்.   தொகுப்பாளர்: ஒவ்வோர் ஆண்டும் பிப்பிரவரி 21ஆம் நாள் ‘உலகத் தாய்மொழி நாள்’ கொண்டாடுகிறோம். உலக நாடுகள் எல்லாமே இந்த நாளை மிகச் சிறப்பாகக் கடைப்பிடிக்கின்றன. இந்த நாளை…

ஏணிப் படியாய் உயர்த்திய சான்றோர்! – மறைமலை இலக்குவனார்

இழுக்கு நிறைந்த போலிச் சடங்கும் அழுக்குப் படிந்த மூடத் தனங்களும் அழுத்தி வைத்த அடிமை வாழ்வே ஆண்டவன் கொடையென மயங்கிய நாளில் ஆதவன் உதயமாய் விடியல் அளித்தார்; நாணத் தக்க சாதிப் பீடையால் கூனிக் குறுகிக் கிடந்த தமிழரை ஏணிப் படியாய் உயர்த்திய சான்றோர்; பெரியார் பெருமை உரைக்கவும் இயலுமோ? -மறைமலை இலக்குவனார்

மங்காத் தமிழ் வளர்க்கும் மறைமலை இலக்குவனார்!

மங்காத் தமிழ் வளர்க்கும் மறைமலை இலக்குவனார்! திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதைவணக்கஞ் செய்தல் வேண்டும் என்னும் பாரதியார் நல்லுரைக்கிணங்க அயல்நாட்டாராலும் போற்றத்தகும் புலமையும் பிறர் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகம் வணங்கச் செய்யும் தமிழ் வளமையும் மிக்க அருந்தமிழ்ச் சான்றோர் பேராசிரியர் இலக்குவனார் மறைமலை அவர்கள்.   தமிழ்நாட்டில் சென்னை மாநிலக்கல்லூரியில் 30 ஆண்டுகளும் புறநகர்க்கல்லூரிகளில் 5 ஆண்டுகளும் கல்விப்பணி ஆற்றியதுடன் ஓராண்டுக்காலம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார். அங்குப் பணியாற்றுகையில் அப்பல்கலைக்கழகம் சார்பில் பிற அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும்…

மனத்தில் பதிந்த மறைமலை இலக்குவனார் – ஏர்வாடி இராதாகிருட்டிணன்

மனத்தில் பதிந்தவர்கள் : பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் – ஏர்வாடி இராதாகிருட்டிணன்     பாவேந்தருடன் பழகுதற்கியலாத வாய்ப்பை உடன்பிறப்பு மன்னர்மன்னனுடனும் எழுத்தாளர் தமிழ்வாணனுடன் கிடைக்காத தொடர்பைச் உடன்பிறப்புகள் லேனா, இரவி தமிழ்வாணன் ஆகியோரிடமும், இசைமேதை சீர்காழியுடன் பெறாத தோழமைப் பேற்றினைத் தம்பி மரு.சிவசிதம்பரத்திடமும் பெற்றதைப் போல மூத்த தமிழறிஞர் மறைந்த பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களுடன் பழகக் கிடைக்காத குறையை இறைவன் எனக்குப் பேராசிரியர் மறைமலையுடனான நட்பில் அருளியிருக்கிறான் என்கிற நிறைவு என் நெஞ்சில் நிரம்பவுண்டு.   பேராசிரியர் மறைமலை அவர்களைப்ப்றறி…

வணங்கிப் போற்றுகிறேன் வாழிய நீவிர்! – மறைமலை இலக்குவனார்

வணங்கிப் போற்றுகிறேன் வாழிய நீவிர்! திட நெஞ்சுடனே களத்திலிறங்கிப் பிடுங்கிப் பாம்புகள் கண்(டு)அஞ்சாமல் மழைவெள்ளத்தில் உள்ளம் சுருங்கி ஒடுங்கித் துன்புறும் மக்களை அணுகி உணவும் உடையும் உறுபொருள் பலவும் வழங்கும் பணியில் முனைந்து செயற்படும் ஆற்றல்சார் இளைஞர் கூட்டத்தினரே! வணங்கிப் போற்றுகிறேன் வாழிய நீவிர்! முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் சொல்லாமல் கொடுத்த வள்ளல்கள் போலவே அழியாப் புகழை அடைந்தீர்!வாழிய! முனைவர் மறைமலை இலக்குவனார்

பெருங்கவிக்கோவின் சேதுகாப்பியம் வரலாற்று ஆவணம் – மறைமலை இலக்குவனார்

பெருங்கவிக்கோவின் சேதுகாப்பியம் 3 மறுமலர்ச்சிக் காண்டம் நூலிற்கு முனைவர் மறைமலை இலக்குவனாரின் அணிந்துரை பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் நாடறிந்த நற்றமிழ்ப்பாவலர். உலகைப் பலமுறை (49 தடவை) வலம் வந்த ஒரே தமிழறிஞர். ‘கெடல் எங்கே தமிழின் நலம்!அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!’ எனும் புரட்சிக்கவிஞரின் ஆணையைத் தம் வாழ்நாள்பணியெனக் கொண்டு செயலாற்றும் தமிழ்மறவர். கரிகாற்பெருவளத்தானையும் சேரன் செங்குட்டுவனையும் நிகர்த்த தமிழ் மறம் கொண்ட தமிழ் உரிமைப்போராளி. ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்’என்னும் திருநாவுக்கரசரின் வாக்கையேற்றுத் தமிழ்ப்பகை கடியும் தறுகண்மை மிக்கவர். தமிழுக்குச் செம்மொழித்தகுதிப்பேறு வழங்கவேண்டுமென அற்றைத்…