தலைப்பு-உலகநூல், திருக்குறள் :thalaippu_ulaganuul_thirukkural

உலகநூல் திருக்குறள் ஒன்றே!

 வள்ளுவர் பார்வை உலகப்பார்வை, ஒவ்வொருவரும் உலகவராம் பார்வை. அதனாலேயே தம்மையோ, தம் மண்ணையோ, தம் மண்ணின் மொழியையோ, தம் அரசையோ, தம் இறைமையையோ சுட்டினார் அல்லர். ஆதலால், உலகுக்கு ஒரு நூல் என உலகவரால் வள்ளுவம் கொள்ளப்படுகிறதாம். உலக மறைநூல் ஒன்று காண்டல் வேண்டும் என்னும் காலமொன்று நேரிடும்போது ஒரே ஒரு நூலாக நிற்க வல்லதும் வள்ளுவமேயாம்.

புலவர் மணி இரா.இளங்குமரனார் :

உங்கள் குரல் தமிழ்ச்செம்மொழிச் சிறப்பு மலர்