இலக்கியக் கூட்டம் : எழுத்தாளர் திருமதி. அ. வெண்ணிலா

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) தொடர் இலக்கியக் கூட்டங்களை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகின்றது.

 இந்த மாதம் எழுத்தாளர் திருமதி. அ. வெண்ணிலா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “தேவரடியார்கள் – கலையே வாழ்வாக!” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்.

 அமெரிக்க நேரம்: ஞாயிற்றுக்கிழமை, ஐப்பசி 07, 2052 /அட்டோபர், 24ஆம் நாள், இரவு 8:30மணி கிழக்கு நேரம் (EDT)

 இந்திய நேரம் IST : திங்கட்கிழமை, ஐப்பசி 08, 2052 /அட்டோபர், 25 ஆம் நாள், காலை 6 மணி 

 

அணுக்கி நேரலை  / Zoom Live

 

https://tinyurl.com/FeTNA2020ik

 

கூட்ட எண்    / Meeting ID : 954 1812 2755

 

எழுத்தாளரும், கவிஞருமான திருமதி. அ. வெண்ணிலா தமிழ்க் குமுகத்தில் இக்காலப் பெண் படைப்பாளிகளில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவராவார்., திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்த இவர் 1998 இல் தனது முதல் கவிதைத் தொகுப்பாக ‘என் மனசை உன் தூரிகை தொட்டு’ நூலை வெளியிட்டார்.

 தொடர்ந்து பல்வேறு கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், சிறுகதைகளை எழுதியுள்ளார். மதுராந்தகச் சோழனின் (இராசேந்திரச் சோழன்) வாழ்க்கையைக் குறித்து இவர் எழுதியுள்ள

“கங்காபுரம் ” புதினம் தமிழ் மக்களால் மிகவும் பாராட்டப்பட்டது.

 தேவரடியார்கள் குறித்து இவர் எழுதியுள்ள ஆய்வு நூல் தமிழில் மிகவும் குறிப்பிடத்தகுந்த நூல்களில் ஒன்றாகும்.

இவர் கணவர் மு.முருகேசும் புகழ்மிகு கவிஞராவார்.

 சிறப்புரையைத் தொடர்ந்து கேள்வி மறுமொழி நேரமும் இடம்பெறும். தாங்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ள பேரவை இலக்கியக் குழு சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.