“தொன்மை! தொடக்கம் !! தொடர்ச்சி!!!” குழுவின்

இணையவழிக் கூட்டம்

தமிழ் மொழி மற்றும் தமிழரின் சிறப்பு தொன்மையில் இருப்பதோடு அதன் தொடர்ச்சியிலும் இருக்கிறது. உலகின் தொன்மையான பல நாகரிகங்கள் தன் தொடர்ச்சியை இழந்து அழிந்து போனதைப் பார்க்கிறோம். சங்கக் காலம் தொடங்கி, தற்காலம் வரை உள்ள தமிழர் வரலாற்றில் களப்பிரர் காலத்தை மட்டும் ஏன் இருண்டகாலம் என்று சிலர் கூறுகிறார்கள்?

தமிழகத் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தொல்லியல் அறிஞர் முனைவர் ஆ.பத்மாவதி அவர்கள் இன்று வரை கிடைக்க பெற்றுள்ள தொல்லியல் ஆதாரங்கள் கொண்டு களப்பிரர் காலத்தின் இருளைப் போக்க ஒளி பாய்ச்ச உள்ளார்.

களப்பிரர் என்போர் யார்?
அவர்கள் காலத்தில் மக்கள் நிலை என்ன?
அவர்கள் காலத்தில் தமிழ் மொழியின் நிலை என்ன?
களப்பிரர் ஆட்சியின் தோற்றமும் மறைவும் எப்படி நிகழ்ந்திருக்கலாம்?

போன்ற பல கேள்விகளுக்கு விடையைத் தெரிந்து கொள்ள வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையின் “தொன்மை! தொடக்கம்! தொடர்ச்சி!” குழுவின் இணையவழிக் கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ள அவரது “புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு” என்ற புத்தகம் தமிழ் ஆய்வாளர்களிடையே ஆர்வத்தையும் , விவாதத்தையும் தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு: களப்பிரர் காலம் இருண்ட காலமா?

கூட்ட இணைப்பு / Zoom Link: http://www.tinyurl.com/tttfetna

அணுக்கி எண் /Zoom Meeting ID: 859 8002 6724

கார்த்திகை 24, 2053 / திசம்பர் 10, சனிக்கிழமை (12/10/2022) 10:30 காலை (அமெரிக்கக் கிழக்கு நேரம்)

கார்த்திகை 24, 2053 / திசம்பர் 10, சனிக்கிழமை (12/10/2022) 9:00 இரவு (இந்திய நேரம்)

அன்புடை நெஞ்சம்

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை