எம்மை மகிழ்விப்பாய்!

 

என் எழுதுகோல் களத்தில்

உன்பெயர்தான் முளைக்கிறது

என் இதழ்ச் செடியில்

உன்பெயர்தான் பூக்கிறது

என் மன ஊஞ்சலில்

உன்பெயர்தான் ஆடுகிறது

என் கண்ஆடிகளில்

உன்பெயர்தான் தெரிகிறது

என் செவி மணிகளில்

உன்பெயர்தான் ஒலிக்கிறது

என் புத்தகத் தோட்டத்தில்

உன்பெயர்தான் மணக்கிறது

என் இல்லக் கோயிலில்

உன்பெயர்தான் குடியுள்ளது

என் எண்ண வானத்தில்

உன்பெயர்தான் பறக்கிறது

என் வாணாளில் நீ வந்து

எம்மை மகிழ்விப்பாய்!

 

– இளவல்